News

Tuesday, 09 April 2019 01:00 PM

உலக வங்கி  சமீபத்தில் தெற்காசியாவுக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் சாராம்சம் என்னவெனில் தெற்காசியா நாடுகளின் வளர்ச்சி, வருவாய், உற்பத்தி, ஆட்சிமுறை போன்றவற்றை ஆராய்ந்து, உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதத்தை கணித்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டை விட நடப்பு  ஆண்டில் அதன் விகித சாரம் கூடுதலாக இருக்கும் என்று தகவல் வெளியிட்டுள்ளது. 2018-19-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2 சதவீதம் என்றும், நடப்பு ஆண்டில் 2019-2020 இல் 7.5 சதவீதமகா இருக்கும் என கூறியுள்ளது. நுகர்வோருக்கான சந்தை, தேவை  நாளுக்கு நாள் அதிகரிப்பதனாலும், தனியார் தொழில் நிறுவனங்களும் அதிக அளவில் முதலீடு செய்வதினாலும், அந்நிய தேசத்தினரும் வர்த்தகம் செய்ய விளைவதால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்கிறது உலக வங்கி.

வேளாண்துறையில் 4 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என்கிறது. மேலும், கச்சா எண்ணெயின் விலை கட்டுப்பாட்டில் இருக்கும். பணவீக்கமும் கட்டுக்குள் இருக்கும் என்றும் கணித்துள்ளது.      

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)