மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 November, 2020 12:00 PM IST
Credit : Siru thozhil ideas

திருவாரூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் வரும் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்துடன் 25 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு பயனாளிக்கும் ஒருநாள் வயதுடைய 1,000 கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும். மேலும் 1,500 கிலோ தீவனம் மற்றும் இன்குபேட்டர் கொள்முதல் செய்ய 50 சதவீத மானியம் வழங்கப்படும்.

தகுதிகள்

பொருளாதார ரீதியாக ஏழ்மையில் உள்ளவர்கள் மட்டுமே பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவார்கள். கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பயனாளிகள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் 2,500 சதுர அடியில் 1,000 கோழிக்குஞ்சுகளை பராமரிக்கும் வகையில் கொட்டகை அமைக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறையின் வேறு எந்த கோழி வழங்கும் திட்டத்திலும் பயன் பெற்றிருக்கக் கூடாது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் நவ.23-ம் தேதிக்குள் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.....

கிராமங்களில் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் தொடங்க 35% மானியம் மற்றும் ரூ. 25 லட்சம் வரை கடனுதவி!!

நாட்டுகோழி வளர்ப்பு திட்டம் : 50% மானியத்தில் 1000 கோழி குஞ்சுகள், முட்டை அடைகாத்தல் கருவி - விண்ணப்பங்கள் வரவேற்பு!!

கோழி பண்ணை அமைக்கும் தோனி - 2000 கருங்கோழிகள் ஆர்டர் !!

English Summary: Get Native Chicken and other benefits for 50 percent subsidy by applying before november 23rd under National Agricultural Development Scheme
Published on: 18 November 2020, 11:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now