மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 March, 2020 9:15 AM IST

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பெரும்பாலான உணவு தானியங்கள் அறுவடை பணி முடிந்து முறையாக சேமிக்கவும் முடியாமல், விற்பனை செய்யவும்  இயலாமல் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே  தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், விவசாயிகள் தங்களின்  விளைபொருட்களை எவ்வித கட்டணமின்றி ஒரு மாத காலம் வரை சேமித்து வைக்கலாம என அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டத்தை தொடர்ந்து  தேசிய எல்லை முதல் கொண்டு நாட்டின் அனைத்து மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவிசிய மற்றும் அன்றாட பொருட்களின் சரக்கு போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி முடிந்து அறுவடை பணிகள் நடந்து வருகிறது. விவசாயிகள் நெல், நிலக்கடலை போன்ற பயிர்களை, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர். ஆனால் கரோனாவின் எதிரொலியால் விற்பனை கூடங்களுக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதால் தேக்க நிலை உருவாகி உள்ளது. எனவே விவசாயிகள் அரசின்  ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்திக் தங்களின் விளைபொருட்களை சேமித்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு உதவும் வகையில், எவ்வித கட்டணமின்றி தங்களின் விளைபொருட்களை ஒரு மாத காலம் வரை சேமிப்பு கிடங்குகளில் பாதுகாத்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமல்லாது விவசாயிகள் சேமிப்பு கிடங்குகளில் வைக்கும் விளைபொருட்களின், தற்போதைய சந்தை விலையில், 75 சதவீதம் வரை ( > 3 லட்சம் ரூபாய்) பொருளீட்டு கடன் பெற முடியும். அடமானத்தில் வைக்கும்  விளைபொருட்களுக்கு 30 நாட்கள் வரை  எவ்வித வட்டியும் செலுத்த தேவையில்லை என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

English Summary: Get The Latest Update of Agriculture Regulatory Outlets Announcement For Farmers
Published on: 26 March 2020, 09:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now