நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 April, 2022 8:08 AM IST
Gift for students watering birds

வெயிலின் தாக்கத்தில் தண்ணீர் இன்றி, தவிக்கும் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும் என பள்ளி மாணவர்களிடம் தன்னார்வ இளைஞர்கள் ஊக்கப்படுத்தி வருகிறார்கள். கோடையில் வெப்பத்தின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டு செல்லும் சூழலில், மனிதர்களால் கூடத் தாங்க முடியவில்லை. இதை போல, வெயிலின் தாக்கத்தால் பறவைகள், வனவிலங்குகள் உயிரிழப்புகள் வரை செல்லுகிறது. இந்நிலையில், பறவைகளின் உயிரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில், பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பதை தன்னார்வலர்கள் பலரும் பொதுமக்களிடம் ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

பறவைகளுக்கு தண்ணீர் (Water for Birds)

தஞ்சாவூரில் அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சேர்ந்த இளைஞர்களான சதீஸ்குமார், வின்சென்ட், பாரதி ஆகியோர் பள்ளி மாணவர்களிடம் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக, மண்ணில் செய்யப்பட்ட சட்டியை வழங்கி வருகின்றனர். அதன்படி, தஞ்சாவூர் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் மாணவர்களுக்கு, மண்சட்டியை வழங்கினார். இந்த நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமையாசிரியர், மாவட்ட சாரணர் பயிற்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சதீஸ்குமார் கூறியதாவது; தற்போது கோடையால் பறவைகள் தண்ணீர் இன்றி தவிப்பதை தடுக்க பொது இடங்களிலும், வீடுகளிலும் மண்பானையில் தண்ணீர் வைக்கும் பழக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு மண்சட்டி வழங்கப்படுகிறது.

இதுவரை தஞ்சாவூரில், 50 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 500 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, வைக்கும் போது, மாணவர்கள் அதை மொபைலில் படம் எடுத்து வைத்துக்கொள்ள கூறப்பட்டுள்ளது. அதன் மூலம் பறவைகளை பற்றி தெரிந்து கொள்ள முடியும். இதற்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக புத்தங்கள், சான்றிதழ் பரிசாக வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க

கடலில் காற்றாலை மின் நிலையம்: தனுஷ்கோடியில் ஆய்வு மையம்!

வாடிய செடி, மரங்களுக்கு புத்துயிர் ஊட்டும் மாமனிதர்!

English Summary: Gift for students watering birds: Youngsters are amazing!
Published on: 12 April 2022, 08:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now