நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 March, 2022 7:10 PM IST
Gold Jewelry Appraiser Training

சென்னை அரசு மற்றும் மத்திய பனை பொருட்கள் நிறுவனம், காதி கிராமத் தொழில் வாரியம் வாயிலாக, தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடத்தப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள அனைத்து ஆண், பெண் இருபாலரும் முன்பதிவு செய்வது அவசியம்.

பயிற்சி (Training)

வரும், 28ம் தேதி முதல் ஏப்ரல் 6 வரை, மாதவரம் மில்க் காலனியில் உள்ள பயிற்சி நிலையத்தில் நடைபெறும் இப்பயிற்சியில், தங்கத்தின் தரம் அறிதல், மதிப்பீடு செய்தல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் விதம் குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது.

பயிற்சி பெற விரும்பும் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வயது உச்ச வரம்பில்லை. கல்வித் தகுதி குறைந்தது 8-ம் வகுப்பு. கூடுதல் தகவல்களுக்கு, 94437 28438 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சியின் இறுதியில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி முடித்தவர்கள் தேசிய, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதிநிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளராகவும் பணியில் சேரலாம். மேலும், சுயமாக நகைக் கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம்.

மேலும் படிக்க

கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்த பிரத்யேக கிரெடிட் கார்டு!

BSNL 4G சேவை: சுதந்திர தினத்தில் அறிமுகம்!

English Summary: Gold Jewelry Appraiser Training: Call to Apply!
Published on: 25 March 2022, 07:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now