News

Wednesday, 05 October 2022 12:30 PM , by: Elavarse Sivakumar

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.39 ஆயிரத்தைத் நெருங்கியிருப்பது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

27-ந்தேதி

தங்கம் விலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்றத்தாழ்வு நிலவி வந்தது. கடந்த 27-ந்தேதி சவரன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன்பின் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிகரித்தது.

ரூ.480 உயர்வு

இதற்கிடையே நேற்று பவுன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது.சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 680-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 835 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.67 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67-க்கு விற்கிறது.

ரூ.1040

2 நாட்களில் தங்கம் சவரனுக்கு 1040 ரூபாய் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்வை சந்தித்துள்ளது இல்லத்தரசிகளை மட்டுமல்லாமல், இனிவரும் திருமண சீசனில் கல்யாணம் செய்யத் திட்டமிட்டிருப்பவர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

மேலும் படிக்க...

விவசாயிகள் உடனே செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)