News

Tuesday, 01 February 2022 05:05 PM , by: Deiva Bindhiya

Gold prices fall for fifth day in a row? Price Status Inside!

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிவு காணப்பட்ட நிலையில் சமீபத்தில் அதிரடி திருப்பமாக தங்கத்தின் விலையில் உயர்வு காணப்பட்டது, இந்நிலையில், நான்காவது நாளாக, இன்று தங்கம் விலை குறைந்திருக்கிறது, மேலும் நேற்று விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதும் குறிப்பிடதக்கது.

தமிழ்நாட்டு பெண்கள் மட்டுமல்லாமல், மொத்தமாக பெண்கள் என்றாலே தங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் மோகம் அதிகம். அந்த வகையில், தற்போது தங்கத்தில் வரும் புதிய டிசைன்ஸ் கலேக்சன்ஸ் ஆண்களையும் வசிகரிக்கிறது. தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருவது குறிப்பிடதக்கது. எனவே இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை தொடங்கி 8 கிராம் தங்கத்தின் விலை கீழே காணவும்.

இன்று (01-02-2022) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 11 குறைந்து ரூ. 4,527-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ. 110 குறைந்து ரூ. 36,216-க்கு விற்பனையாகி வருகிறது. இது சென்ற வாரம் இறுதி நாளான, சனிக்கிழமை அன்று, 8 கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 36,592-க்கு விற்பனை செய்யப்பட்டதும் குறிப்பிடதக்கது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ 65.30-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 100 ரூபாய் குறைந்து, ரூ. 65,400 ஆக உள்ளதும் குறிப்பிடதக்கது.

செய்தி: 10 ரூபாய்க்கு மதிய உணவு, நடிகர் கார்த்தியின் ஏற்பாடு! எங்கே?

தங்கம், மக்களின் இயல்பு வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாகும். விவசாயிகளும் தங்கம் வைத்து கடன் பெறுவதை எளிதென நம்புகின்றனர். விவசாயிகள் மட்டுமின்றி சிறு தொழில் முதல் பெருந் தொழில் செய்வோர் வரை அனைவரும் தங்கத்தில் செய்யும் முதலீடு மற்றும் தங்கத்தின் மீது வாங்கும் கடன் அனைத்தையும் எளிது என நம்புகின்றனர். ஆகவே இதன் விற்பனை இன்றளவும் இன்றியமையாதது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய; (Find out the price of gold at home)

வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.

தங்கத்தின் தூய்மையை சரிபார்க்கலாம் (Check the purity of the gold)

நீங்கள் இப்போது தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க விரும்பினால், இதற்காக அரசு, ஒரு செயலியை உருவாக்கியுள்ளது. அதன் பெயர் 'பிஐஎஸ் கேர் ஆப்' ஆகும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கத்தின் தூய்மையை சரிபார்க்கலாம். இந்த செயலி மூலம், தங்கத்தின் தூய்மையை மட்டுமல்லாமல் தங்கம் தொடர்பான புகாரையும் இதில் தெரிவிக்கலாம் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

அடல் பென்ஷன் யோஜனா: தம்பதிகளுக்கான சிறப்பு திட்டமாகும்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)