News

Wednesday, 27 April 2022 02:23 PM , by: Ravi Raj

Gold Prices fall for Third day..

கடந்த சில நாட்களாக, உலக காரணிகளுக்கு ஏற்ப, சர்வதேச சந்தையின் நிலை மற்றும் மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றங்களை கண்டு வருகிறோம். இருப்பினும், வரும் ஆண்டுகளில் தங்கத்தின் விலை உயரும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதில் தற்போது குழப்பம் நிலவுகிறது. இந்த நெருக்கடியானது உலகளாவிய தங்க சந்தையில் பெரும் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை 3 நாட்களாக தொடர்ந்து சரிந்து வருவதால், மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,879-க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.64 குறைந்து ரூ.39,032க்கு விற்பனையானது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,997க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் 24 காரட் தூய தங்கத்தின் விலை ரூ.5,278 ஆகவும், ஒரு சவரன் ரூ.42,224 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி 70.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 70,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இந்தியாவைப் பொறுத்த வரையில், பல்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் மாறுபடுகிறது. வரி வகையைப் பொறுத்து வெவ்வேறு இடங்களில் விலைகள் மாறுபடும். மேலும் செலவு மற்றும் சேதம் ஆகியவற்றின் அடிப்படையில் கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கங்களைக் காணலாம்.

உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையையும், பல அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் உயர்த்தியுள்ளது. அதன் தாக்கம் மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் உள்ளது.

உலகளாவிய சந்தைகளில் நேர்மறையான அணுகுமுறை இருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்த வரையில், வெவ்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் மாறுபடுகிறது. வரி வகையைப் பொறுத்து வெவ்வேறு இடங்களில் விலைகள் மாறுபடும். மேலும், விலை மற்றும் சேதத்தின் அடிப்படையில் கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கங்களைக் காண முடியும்.

மேலும் படிக்க..

சென்னை: தங்கம் விலை உயர்வு: விலை என்ன?

தங்கம் விலை குறைந்துள்ளது, எவ்வளவு, விலை என்ன? விவரம் உள்ளே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)