மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 February, 2021 7:49 AM IST
Credit : Daily Thandhi

அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் (Paddy Procurement Stations) இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகின்றன. இதனால், அம்மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டில் சம்பா சாகுபடி (Samba cultivation) பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரியலூர் வட்டாரத்தில் தூத்தூர், திருமழபாடி, குருவாடி, ஏலாக்குறிச்சி, கீழகாவட்டாங்குறிச்சி, கரைவெட்டி, பளிங்காநத்தம், எலந்தைகூடம், காமரசவள்ளி, ஓரியூர், கள்ளூர், திருவெங்கனூர், திருமானூர், வடுகபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:

இதேபோல் செந்துறை வட்டாரத்தில் குழுமூர், சன்னாசிநல்லூர், தா.கூடலூர் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டாரத்தில் கோடலிகருப்பூர், ஜி.கே.புரம், வாழைக்குறிச்சி, முட்டுவாஞ்சேரி, ஸ்ரீபுரந்தான், இடங்கன்னி, காரைக்குறிச்சி, கார்குடி ஆகிய கிராமங்களிலும், ஆண்டிமடம் வட்டாரத்தில் ஆண்டிமடம், பெரியாத்துக்குறிச்சி ஆகிய கிராமங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. எனவே அந்தந்த பகுதிக்கு அருகே உள்ள விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை (Direct Paddy Procurement Station) பயன்படுத்தி பயன்பெறலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா (Rathna) வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மகிழ்ச்சி:

நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விவசாயிகள் விரைவாக நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யலாம். நிவர் (Nivar), புரெவி புயல் (Burevi storm) மற்றும் பருவம் தவறிய மழையால், சோகத்தில் மூழ்கிய விவசாயிகளுக்கு, நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வருவது ஓரளவிற்கு ஆறுதல் அளிக்கும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

எள், கடலைக்கு விலை முன்னறிவிப்பை வெளியிட்டது வேளாண் பல்கலைக்கழகம்!

மார்ச் மாதத்தில் வாழை விலை என்னவாக இருக்கும்? வேளாண் துறை கணிப்பு!

English Summary: Good news for farmers! Coming into first use today Paddy Procurement Stations!
Published on: 06 February 2021, 07:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now