News

Friday, 23 September 2022 06:29 PM , by: T. Vigneshwaran

People With Disabilities

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில், உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நாளை (24ம் தேதி) முதல் அடுத்த மாதம் 12ம் தேதி வரை உதவிகள் மற்றும் உபகரணங்கள், மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலமாக உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் வரும் 24-ம் தேதி முதல் அடுத்த மாதம் 12-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

அதன்படி வரும் 24-ம் தேதி நரிமேட்டில் உள்ள ஓ.சி.பி.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 25-ம் தேதி பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியிலும், 26-ம் தேதி பழங்காநத்தம் டி.வி.எஸ்.மெட்ரிகுலேசன் பள்ளியிலும் முகாம் நடக்கிறது.

27-ம் தேதி வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 28-ம் தேதி கொட்டாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியிலும், 29-ம் தேதி ஒத்தக்கடை உலகனேரி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியிலும் முகாம் நடக்கிறது. 30-ம் தேதி திருப்பாலை யாதவா கல்லூரியிலும், அக்டோபர் 1-ம் தேதி பாத்திமா கல்லூரியிலும், 6-ம் தேதி தியாகராஜர் கல்லூரியிலும், 7-ம் தேதி திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியிலும், 8-ம் தேதி மேலூர் அரசு கல்லூரியிலும் முகாம் நடக்கிறது.

10-ம் தேதி பேரையூர் அரசு மேல்நிலைபள்ளியிலும், 11-ம் தேதி உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியிலும், 12-ம் தேதி திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைபள்ளியிலும் முகாம்கள் நடக்கிறது.

இதில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களுக்கு தேவையான உபகரணங்களை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

விவசாயிகளுக்கு தீபாவளிக் பரிசு, அரசு 35,250 ரூபாய் வழங்கும்

அரசு: குருவை பயிர் விதைகளுக்கு 90 முதல் 100% மானியம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)