News

Sunday, 16 January 2022 03:50 PM , by: T. Vigneshwaran

M.K Stalin

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டார். ஜனவரி 4ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டன.

இதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கரும்பு ஆகிய 21 பொருட்கள் வழங்கப்படுகின்றது. தமிழகத்தில் 3 நாட்கள் பொங்கல் விடுமுறைக்கு பிறகு நாளை முதல் மீண்டும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதுவரை மொத்தம் 88 சதவீதம் பேர் பொங்கல் தொகுப்புகளை வாங்கியுள்ளனர்.

தமிழர் திருநாளை பொதுமக்கள் சிறப்பாக பொங்கல் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் சுமார் 2.15 கோடி பேருக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இந்த பொருட்கள் கடந்த 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டன. இந்த தேதிக்குள் வாங்க முடியாதவர்கள் வருகிற 31ம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

ஓய்வூதியர்களின் உதவித்தொகையை உயர்த்த ஒப்புதல் அளித்த அரசு!

ஜல்லிக்கட்டில் வீபரிதம்! உரிமையாளர் மீதே பாய்ந்த காளை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)