மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 November, 2020 8:02 PM IST
Credit : DT Next

இந்தியாவில் கொரோனா (Corona) பாதிப்பை கட்டுப்படுத்தும் வண்ணம் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு (Lockdown) பிறப்பிக்கப்பட்டது. இதனால், பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டது. இதையொட்டி மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இலவச உணவுப் பொருட்கள்:

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்கள் (free Food items) வழங்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார்.

இலவச கொண்டை கடலை:

PHH/AAY ரேஷன் அட்டைதாரர்களுக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், மத்திய அரசின் திட்டமான PMGKAY-II திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான 5 மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு தலா ஒரு கிலோ வீதம் மத்திய தொகுப்பில் இருந்து கோவிட்-19 நிவாரணமாக கொண்டைக் கடலை (Channa) PHH/AAY குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கொண்டைக் கடலை மத்திய தொகுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு NAFED நிறுவனம் மற்றும் இக்கழக உள்மண்டல இயக்கம் மூலம் அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. மத்திய தொகுப்பிலிருந்து பெறப்பட்ட கொண்டைக் கடலை டிசம்பர் 2020 மாதத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் PHH/AAY குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ வீதம் வழங்கப்பட வேண்டும்.

முன்நகர்வுக்கு உத்தரவு

நவம்பர் 21ஆம் தேதி முதல் அனைத்து மண்டல கிடங்குகளில் இருந்தும் சில்லறை அங்காடிகளுக்கு கொண்டைக் கடலை அனுப்பப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை (Department of Food Supply and Consumer Protection), தமது கடிதத்தில் மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் பெறப்படும் கொண்டைக் கடலை அனைத்து கிடங்குகளில் இருப்பு வைக்கவும், இதையொட்டி முன்நகர்வு செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பூச்சியின் சத்தம் மூலம், 140 பூச்சி இனங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆய்வு!

வெண்டைக்காய் விலை குறைவு! வேதனையில் ஆற்றில் கொட்டிய விவசாயிகள்!

English Summary: Good news for Tamil Nadu ration card holders!
Published on: 20 November 2020, 08:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now