அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 August, 2022 1:30 PM IST
New Train Service

கர்நாடகாவில் இருந்து திருச்சி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த வழித்தடங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதோடு, இந்த வழித்தடங்களில் கூடுதல் சேவையை தொடங்க வேண்டும் என பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலனை செய்த ரயில்வே நிர்வாகம் வாரந்திர சிறப்பு ரயிலை அறிமுகம் செய்துள்ளது.

புதிய ரயில் சேவை (New Train Service)

ரயில் பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில், ஹூப்ளி சந்திப்பு(SSS HUBBALLI JN) முதல் ராமேஸ்வரம்(RAMESWARAM) வரை சனிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து ஹூப்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரு மாதங்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு புறப்படும். இந்த சிறப்பு ரயில் (07353) தேவநகரி, தும்கூரு, யஷ்வந்த்பூர் சந்திப்பு, ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, மன்னார்குடி, ராமநாதபுரம் வழியாக மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை 6.15 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07354) ராமேஸ்வரத்தில் இருந்து ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 25 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹூப்ளி சந்திப்பு சென்றடையும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவையால் பெங்களூருக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பயனடைவதோடு, ராமேஸ்வரம், திருச்சி பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டது IRCTC!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: இனி கன்ஃபார்ம் டிக்கெட் ஈஸியா கிடைக்கும்!

English Summary: Good News for Train Passengers: New Train Service Begins!
Published on: 06 August 2022, 01:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now