நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 February, 2022 6:53 PM IST
Ration Card Update

உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசுக்கு தேர்தலுக்குப் பிறகு ரேஷன் திட்டத்தை நிறுத்துவதற்கான திட்டங்களை வகுத்துள்ளது என்று கூறியுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேசத்தில் தனது ஆட்சி அமைந்தால் ஏழைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்களுடன் சேர்த்து, உங்கள் உடல் இன்னும் ஆரோக்கியமாக இருக்க ஒரு கிலோ நெய்யும் வழங்கப்படும் என்றார். மேலும் அகிலேஷ் யாதவ் கூறுகையில், "தற்போது ஏழைகளுக்கு கிடைக்கும் ரேஷன், தேர்தல் வரை மட்டுமே கிடைக்கும். தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைத்தால் இலவச ரேசன் கிடைக்காது" என்றார்.

அகிலேஷ் கூறுகையில், "முன்னதாக இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதை நவம்பர் மாதமே நிறுத்துவதற்கு பாஜக அரசு தயாராக இருந்தது. ஆனால் உத்தரபிரதேச தேர்தல் அறிவிக்கப்பட்டதால், ​​இலவச ரேஷன் திட்டம் மார்ச் வரை நீட்டிக்கப்பட்டது என்று கூறினார்.

ஒன்றிய பட்ஜெட்டில் ரேஷன் திட்டத்திற்கான பணம் எதுவும் ஒதுக்கப்படவில்லை. ஏனென்றால் தேர்தல் மார்ச் மாதம் முடியும் என்று பாஜகவுக்கு தெரியும். சோசலிஸ்டுகள் முன்பு கூட ரேஷன் வழங்கினர். சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்தால், ஐந்து ஆண்டுகள் முழுவதும் ஏழைகளுக்கு ரேஷன் வழங்குவோம். இத்துடன், ஒரு வருடத்திற்குள் ரேஷனுடன் சேர்த்து கடுகு எண்ணெய் மற்றும் 2 சிலிண்டர்கள் வழங்குவோம், மேலும் ஏழைகளின் உடல் ஆரோக்கியத்துக்காக ஒரு கிலோ நெய்யும் வழங்கப்படும்.

பாஜக அரசால் விநியோகிக்கப்படும் ரேஷனின் தரம் மோசமாக இருப்பதாகவும், உப்பில் கண்ணாடித் துகள்கள் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளதாகவும் அகிலேஷ் குற்றம் சாடினார்.

உத்தரப் பிரதேசத்தில் 11 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அந்தப் பணியிடங்களை நிரப்புவதன் மூலம் இளைஞர்களுக்கு சமாஜ்வாதி அரசு வேலைவாய்ப்பு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

அகிலேஷ் மேலும் கூறுகையில், "பாஜக தலைவர்கள் வீடு வீடாக ஓட்டு கேட்டு வருகின்றனர். ஆனால், சில கிராமங்களுக்குச் சென்றபோது, ​​காலி கேஸ் சிலிண்டர்களை மக்கள் அவஅவர்களிடம் காட்டியதால், தற்போது அந்தப் பிரச்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் காலி சிலிண்டர்களைக் காட்டிய நாளிலிருந்து, பாஜக தலைவர்களின் வீடு வீடு பிரச்சாரம் நிறுத்தப்பட்டது" என்றார்.

மேலும் படிக்க:

10,000 ரூபாயில் நல்ல பணம் சம்பாதிக்க தொழில்!

தங்கம் விலை: 8 மாத உச்சத்தில் இருந்து சரிவு!

English Summary: Good News: Ration card holders will be given a kilo of ghee!
Published on: 17 February 2022, 06:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now