News

Thursday, 11 August 2022 01:40 PM , by: R. Balakrishnan

Groundnut auction

ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 1636 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 63 ரூபாய் 29 காசுக்கும், அதிகபட்ச விலையாக 72 ரூபாய் 30 காசுக்கும், சராசரி விலையாக 68 ரூபாய் 69 காசுக்கும் ஏலம் போனது.

நிலக்கடலை ஏலம் (Groundnut Auction)

மொத்தம் 52,734 கிலோ எடையுள்ள நிலக்கடலை 35 லட்சத்து 68 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனையானது. சென்ற வாரத்தைப் போல இந்த முறையும் அதிக விலைக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றுள்ளதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1129 நிலக்கடலை மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. அதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 58 ரூபாய் 30 காசுக்கும், அதிகபட்ச விலையாக 70 ரூபாய் 89 காசுக்கும், சராசரி விலையாக 64 ரூபாய் 80 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 36,619 கிலோ எடையுள்ள நிலக்கடலை 23 லட்சத்து 30 ஆயிரத்து 872 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

நிலக்கடலை நல்ல விலைக்கு விற்பனை ஆனதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வரும் நாட்களிலும் இதுபோல் ஏலம் போனால், விவசாயிகளுக்கு நல்ல இலாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க

அதிசய கிணறுகளை இணைக்கும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி.!

ஊதா நிற முட்டைகோஸின் அற்புதப் பயன்களை தெரிந்து கொள்ளுங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)