மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 February, 2021 8:53 PM IST
Credit : Dinamalar

2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தானியங்கள் ஏற்றுமதியில் (Export) நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.2020-21 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் இந்தியாவின் தானியங்கள் (Cereals) (அரிசி, கோதுமை மற்றும் இதர தானியங்கள்) ஏற்றுமதி நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. கொரோனா ஊரடங்கில் அனைத்து தொழில்களும் முடங்கிய நிலையில், விவசாயத் துறை நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. புயல் (Storm) மற்றும் பருவம் தவறிய மழை போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழாமல் இருந்திருந்தால், வேளாண் துறை ஏற்றுமதி இன்னும் அதிகரித்து இருக்கும்.

தானிய ஏற்றுமதி உயர்வு:

முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட வருவாயான ரூ 32,591 கோடியுடன் ($ 4581 மில்லியன்) ஒப்பிடும் போது, 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூபாய் மதிப்பில் 52.90 சதவீதமும், அமெரிக்க டாலர் (America Dollar) மதிப்பில் 45.81 சதவீதமும் உயர்ந்து, ரூ 49,832 கோடி என்னும் அளவை இந்தியாவின் தானிய ஏற்றுமதி (India's grain exports) தொட்டது 2020-21-ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதியும் குறிப்பிடத் தகுந்த அளவு உயர்ந்திருந்தது. 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ரூ 22,856 கோடி ($ 3068 மில்லியன்) ஆக இது இருந்தது. 2019-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ 10,268 கோடியாக ($ 1448 மில்லியன்) ஆக இருந்தது.

கோதுமை ஏற்றுமதி

2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, கோதுமை ஏற்றுமதி (Wheat Export) ரூ 1,870 கோடி ($ 252 மில்லியன்) என்னும் அளவில் இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ 336 கோடியாக ($ 48 மில்லியன்) இருந்தது. டாலர் மதிப்பில் 431.10 சதவீதமும், ரூபாய் மதிப்பில் 456.41 சதவீதமும் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. கொரோனா ஊரடங்கிலும் தானிய ஏற்றுமதி உயர்ந்திருப்பது, இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.

Krishi Jqgran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பயிர்களில் நன்மை செய்யும் பூச்சிகளை உற்பத்தி செய்வது எப்படி?

கோடையில் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்க பசுந்தீவனமாக மர இலைகள்

English Summary: Good progress in grain exports during the Corona curfew! Federal Government Information!
Published on: 10 February 2021, 08:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now