News

Friday, 04 September 2020 11:38 AM , by: Daisy Rose Mary

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை ரத்து செய்யும் முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாகவும் இந்த நிதியை கொரோனா பேரிடருக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் மாதம் மாதம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு மானியமும் வழங்கி வருகிறது. இவை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

கேஸ் மானியம் ரத்து 

இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான (Lpg cylinders) மானியத் தொகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 1-ம்தேதி நிலவரப்படி 14.2 கிலோ எடையுள்ள மானியத்துடன் (subsidy) கூடிய சமையல் கேஸ் சிலிண்டரின் விலையும், மானியமில்லா சிலிண்டர் விலையும் ஒன்றாகவே இருந்து உள்ளது. மேலும், கடந்த 4 மாதங்களாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு எந்தவித மானியமும் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. 

மானியத்தை நிறுத்தியதன் மூலம் மத்திய அரசுக்கு நடப்பு நிதி ஆண்டில் ஏறக்குறையை ரூ.20 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்றும் இதனை கொரோனா நிவாரண திட்டங்களுக்குப் பயன்படுத்த மத்திய அரசு ஒதுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் படுமோசமாக வீழ்ச்சி அடைந்ததுதான் காரணமாகவே மானியம் வழங்கப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க... 

தமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 காலிப் பணியிடங்கள்! 

ஆழ்துளை கிணறு அமைக்க சிறு குறு விவசாயிகளுக்கு 50 % மானியம்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)