மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 April, 2023 3:35 PM IST
Government assures rain-hit farmers of all help and relief fund

மார்ச் மாதத்தில் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 10,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதியளித்த மாநில அரசு, அறிவிப்புக்குப் பிறகு மழையால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு பலன் அளிக்க வாய்ப்புள்ளது.

கம்மம் மற்றும் வாரங்கல் மாவட்டங்களில் மழையால் பாதித்த பகுதிகளுக்கு முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மார்ச் 23ஆம் தேதி சென்று ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.228 கோடியை மாநில அரசு அனுமதித்தது. சேதமடைந்த பயிர்கள் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட தொகை இன்னும் கிடைக்கவில்லை. மேலும், ஏப்ரல் மாதத்திலும் பல முறை மழை விவசாயிகளின் வாழ்வில் புயலை கொண்டுவந்துள்ளது.

மார்ச் மாதத்திற்கு பிறகு பயிர்களை இழந்த விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஏற்கனவே உத்தரவாதம் அளிக்கப்பட்ட ரூ.228 கோடியும், ஏப்ரல் மாதம் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட உள்ள தொகையும் ஒரே கட்டமாக வழங்கப்படுமா என்று தெரியவில்லை.

“முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவின் முழக்கம் அப் கி பார் கிசான் சர்க்கார். அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்குவோம். தற்போது கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழையால் சில விவசாயிகள் பயிர்களை முற்றிலும் இழந்துள்ளனர். சிலருக்கு குறைவான சேதம் ஏற்பட்டது. அதே நேரம், நிறம் மாறிய நெல்லை அரசே கொள்முதல் செய்யும். இழப்பை மதிப்பீடு செய்து வருகிறோம். கணக்கெடுப்பு முடிந்ததும் இழப்பீடு வழங்கப்படும்” என்று பிஆர்எஸ் (BRS) வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் படிக்க: Tangedco புதிய திட்டம்: யூனிட்டுக்கு ரூ. 3முதல் 4 வரை சேமிக்கலாம்!

வியாழக்கிழமை நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பயிர் இழப்புகள் குறித்து விவாதித்து விவசாயிகளுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் பிஆர்எஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில், பல அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் அந்தந்த மாவட்டங்களில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ் நேற்று இரவு பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் இழப்புகள் குறித்து சிர்சில்லா அதிகாரிகளுடன் டெலிகான்பரன்ஸ் நடத்தினார்.

இந்நிலையில், மேடக் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு புதன்கிழமை சென்ற நிதியமைச்சர் டி ஹரிஷ் ராவ் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். துப்பாக்க (Dubbaka) தொகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு அவர் சென்றார். விவசாயிகளின் நெருக்கடியான நேரத்தில் அரசு உறுதுணையாக இருக்கும், எனவே கவலைப்பட வேண்டாம் என்று விவசாயிகளுக்கு உறுதியளித்தார். சில விவசாயிகள் அமைச்சர் முன் கலங்கி நின்றனர். நஷ்டமடைந்த பயிருக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வரை அரசு வழங்கும் என்பதால் கவலைப்பட வேண்டாம் என்றார். ஹரிஷ் ராவ் கூறுகையில், சித்திப்பேட்டை மாவட்டத்தில் மழையால் சுமார் 35,000 ஏக்கர் நெல் சேதமடைந்துள்ளது.

மேலும் படிக்க:

AIIMS ஆட்சேர்ப்பு 2023: 3055 நர்சிங் பணியிடங்கள்| ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

Tangedco புதிய திட்டம்: யூனிட்டுக்கு ரூ. 3முதல் 4 வரை சேமிக்கலாம்!

English Summary: Government assures rain-hit farmers of all help and relief fund
Published on: 27 April 2023, 03:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now