News

Saturday, 04 December 2021 03:16 PM , by: T. Vigneshwaran

Government of Tamil Nadu jobs only for those who know Tamil

தமிழகத்தில் அரசு பணியாளர்கள் அனைவரும் தமிழ் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கூறியுள்ளார்.

தமிநாடு அரசுப்பணி நியமனத்திற்காக நடத்தப்படும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெறுவது அவசியம். தமிழ்மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வு தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது.

குரூப் 1, 2, 2A ஆகிய இரு நிலைகளைக் கொண்ட தேர்வுகளை தமிழ் மொழி தகுதித்தேர்வு விரித்துரைக்கும் வகையில் நடைபெறும். குரூப்-4 ஆகிய தேர்வுகளில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொது தமிழ் மொழி மட்டுமே மதிப்பீடு தேர்வாக இருக்கும்.

தமிழ்நாட்டின் அனைத்து தேர்வுகளிலும், தமிழ் மொழி கட்டாயமாக்குவதன் மூலமாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 100% அரசுவேலை கிடைக்கும் வகையில் தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில், குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தமிழ் மொழி பாடத்தில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தான் தமிழ்நாட்டில் அரசு வேலை பெற முடியும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், மேலும் இனி வரும் காலங்களில் எந்த அரசு தேர்வாக இருந்தாலும் அடிப்படை தமிழ் புலமை அவசியமாகும், தமிழ், தமிழ்நாடு குறித்து கேட்கப்படும் கேள்விகளில் உரிய பதில் அளித்தால் மட்டுமே அரசுப் பணி கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

Post Office: கணவன்-மனைவி ரூ.59,400 பலன் பெற திட்டம்!

PM Kisan: தவணை தொகை விவசாயிகளுக்கு ஏன் கிடைக்கவில்லை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)