மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 October, 2020 12:52 PM IST

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17%லிருந்து 22%ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், இந்த ஆண்டு மேட்டூர் அணை குறித்த நேரத்தில் திறக்கப்பட்டதை காரீஃப் காலத்தில் அதாவது செப்டம்பர் இறுதிவரை 2,135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 32 லட்சத்து 41 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளதாகவும், இதன் மூலம் 6 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இது வரை ரூ.6,130 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குக்கு ஒரே நாளில் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கி 20 நாட்களில் 842 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 2 லட்சத்து 37 ஆயிரம் டன் அதாவது 60 லட்சம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படும்!

விவசாயிகளிடம் அனைத்து நெல் மூட்டைகளையும் அரசு கொள்முதல் செய்யும் எனவும் நாளொன்றுக்கு 5 லட்சம் நெல் மூட்டைகள் 2,135 கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஈரப்பத அளவை உயர்த்த பரிந்துரை!

விவசாயிகளிடம் பெறக்கூடிய நெல் மத்திய அரசின் விதிமுறைப்படி 17 சதவீதம் ஈரப்பதம் இருக்கக்கூடிய நெல்கள் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நிலையில் மத்திய அரசு அதனை 22 சதவீதமாக உயர்த்த வேண்டுமென தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய அரசு குழு விரைவில் தமிழகம் வர இருப்பதாகவும் அப்போது பெறக்கூடிய நெல்லின் ஈரப்பதம் அளவு 22 சதவீதம் வரை இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில், 33 ஏக்கரில் இயற்கை தோட்டம் !!

குழாய் கிணறு, துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம் வரை மானியம் - பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!!

வெங்காய அழுகல் நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் - தோட்டக்கலை துறை அறிவுரை!!

English Summary: Government of Tamil Nadu recommends raising the moisture content of paddy procurement to 22% - said TN Food department Minister Kamaraj
Published on: 21 October 2020, 12:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now