News

Saturday, 08 December 2018 04:01 PM

அணை, குளம், குட்டையில் மீன் பிடிப்பவர்களை உள்நாட்டு மீனவர், என அழைக்கிறோம். அவர்களது மீன் பிடிப்பு திறனை மேம்படுத்தவும், வருவாயை பெருக்கி வாழ்வாதாரத்தை உயர்த்தவும் 50 சதவீதம் மானியத்தில் மீன் பிடி வலைகள், பைபர் படகு வழங்கும் திட்டம் 2014 - 15ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. 

மாவட்டம் தோறும் உள்நாட்டு மற்றும் முழு நேர மீனவர்கள் இந்த உதவியை பெற விண்ணப்பிக்கலாம். இவர்கள் உள்நாட்டு மீன் கூட்டுறவு சங்க உறுப்பினராக இருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தில் மானியம் பெற்றிருக்கக்கூடாது.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு (ஒரு ரேஷன் கார்டுக்கு) ஒரு பயனாளிக்கு 20 கிலோ வலை 20 ஆயிரம் ரூபாய். மானியம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பைபர் படகு விலை 12 ஆயிரத்து 500 ரூபாய். மானியம் 6,250 ரூபாய் வழங்கப்படும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள மீன் துறை உதவி இயக்குனரிடம் விண்ணப்பிக்கலாம். 

விவரங்களுக்கு, 'இயக்குனர், மீன் வளத்துறை, சிவசங்கரன் சாலை, சொக்கலிங்க நகர், தேனாம்பேட்டை, சென்னை - 600 006' மற்றும் போன் எண் 044 - 243 20199ல் தொடர்பு கொள்ளலாம்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)