News

Friday, 18 November 2022 01:06 PM , by: R. Balakrishnan

Working day for School and college

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 25ம் தேதியன்று கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நவம்பர் 19ஆம் தேதியன்று சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

விடுமுறை (Holiday)

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை என்று தொடர்ந்து 3 நாட்கள் மட்டுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பண்டிகைக்கு வெளியூர்களுக்கு செல்லும் அனைவரும் தீபாவளி பண்டிகை முடிந்த அடுத்த நாள் தான் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப முடியும். இதற்காக அக்டோபர் 25ம் தேதி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

மக்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அக்டோபர் 25ம் தேதி ஆகிய தீபாவளி மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உத்தரவிட்டது. இந்நிலையில், கூடுதல் விடுமுறை அளித்துள்ளதால் இதனை ஈடுகட்ட நவம்பர் 19ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

வேலைநாள்

அதன்படி தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 19ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மறுநாள் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ஆம் தேதி பணிநாளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: சம்பளத்தை உயர்த்தும் அரசு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பரான திட்டம்: விண்ணப்பிக்க மார்ச் 2023 தான் கடைசி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)