சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 19 August, 2022 1:48 PM IST
Govt Action

நாளுக்கு நாள் ரஷ்யாவின் மக்கள் தொகை குறைந்து வருவதை அடுத்து 10 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ரூ.13 லட்சம் பரிசு அளிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யாவின் மக்கள் தொகை கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உக்ரைன் போர் காரணமாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ரஷ்யாவில் அதிக அளவு குழந்தைகளை பெற்றெடுக்க்கும் தாய்மார்களுக்கு புதிய திட்டம் ஒன்றை ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் அறிவித்துள்ளார்.

இதன்படி ஒரு பெண் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த தாய்மாருக்கு 13 ஆயிரம் பவுண்டுகள் வெகுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 13 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. 10வது குழந்தையை ஒரு பெண் பெற்றெடுக்கும்போது மீதமுள்ள 9 குழந்தைகளும் உயிருடன் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

இரண்டாம் உலகப் போரின்போது ஏராளமான பொதுமக்கள், ராணுவத்தினர் இறந்த நிலையில் அப்போதைய ரஷ்ய தலைவர் ஜோசப் ஸ்டாலின் அவர்கள் இதுபோன்ற திட்டத்தை அறிவித்தார். அப்போது பல தாய்மார்கள் அதிக குழந்தையை பெற்றெடுத்து வெகுமதியை பெற்றனர். ஆனால் 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சின்னாபின்னமான போது இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ரஷ்யாவின் மக்கள் தொகை குறைந்து வருவதை அடுத்து அதிபர் புதின் இந்த புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:

3 லட்சம் வரை விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கு மத்திய அரசு

Subsidy: விவசாயிகள் ஏக்கருக்கு 9000 ரூபாய் மானியமாகப் பெற முடியும்

English Summary: Govt action: Rs 13 lakh prize for 10 children
Published on: 19 August 2022, 01:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now