News

Tuesday, 27 December 2022 12:18 PM , by: R. Balakrishnan

Allowance Balance

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை தொடர்பான அறிவிப்பு புத்தாண்டில் வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி நிலுவைத்தொகை

தேசிய கவுன்சில் செயலாளர் (பணியாளர்கள் தரப்பு) சிவகோபால் மிஸ்ரா மத்திய அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் நிலைமை மேம்படும் போது, இந்தப் பணம் ஊழியர்களின் கணக்கிற்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி இந்த நிலுவைத்தொகை குறித்து ஊழியர்கள் சார்பில் பலமுறை கோரிக்கை எழுப்பப்பட்டது. இதனுடன், நிதியமைச்சகத்தின் அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் இடையில் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, இந்தப் பணத்தை அரசாங்கம் நேரடியாக புத்தாண்டில் ஊழியர்களின் கணக்கிற்கு மாற்றும் என நம்பப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி நிலுவைத் தொகை பணத்தை 3 தவணைகளில் பெறலாம். ஏனெனில் இந்த பணம் 3 தவணைகளில்தான் முடக்கப்பட்டது. கோவிட்-19 தொற்றுநோய் பிரச்சினையின் போது மத்திய அரசு ஊழியர்கள் 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை அகவிலைப்படி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு பணம் கிடைக்கும்?

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க அரசு ஒப்புக் கொண்டால், அவர்களின் கணக்கில் பெரும் தொகை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. லெவல்-3ல் உள்ள ஊழியர்களின் நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், நிலை-13 அல்லது நிலை-14 ஊழியர்களின் நிலுவைத் தொகை ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

2 லட்ச ரூபாய் பென்சன் வேண்டுமா? உடனே இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!

பொங்கல் பரிசு ரூ.1000: நாளை முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)