அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 14 November, 2022 7:24 AM IST
Special camp for Pensioners

ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழ் (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும்.

வாழ்நாள் சான்றிதழ் (Life Certificate)

ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே தொடர்ந்து பென்சன் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்துக்குள் வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியதாரர்கள் எளிதாக வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்காக டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் (Digital life certificate) சேவை ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு முகாம்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது. எஸ்பிஐ (SBI) வங்கியுடன் இணைந்து இந்த முகாமை அரசு தொடங்கியுள்ளது.

சிறப்பு முகாம் (Special Camp)

முதலில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓய்வூதியதாரர்கள், பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ் பற்றியும், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஓய்வூதியதாரர்களுக்கு வங்கிகள் வழங்கும் சேவைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க

மாதம் ரூ.64,000 பென்சன்: இந்த திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?

Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆன்லைனில் டெபாசிட் வசதி!

English Summary: Govt Special Camp for Pensioners: Why knows?
Published on: 14 November 2022, 07:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now