News

Friday, 07 October 2022 07:51 AM , by: R. Balakrishnan

GPF Interest for Govt employees

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜெனரல் வருங்கால வைப்பு நிதிக்கு (General Provident Fund) அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

GPF வட்டி விகிதம்

அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே அமலில் உள்ள 7.1% வட்டி விகிதம் தொடர்ந்து வழங்கப்படும்.

இதுகுறித்து நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள தீர்மானத்தில், ஜெனரல் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு 2022 அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை 7.1% வட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் வருங்கால வைப்பு நிதி மட்டுமல்லாமல் கீழ்காணும் திட்டங்களுக்கும் 7.1% வட்டி விகிதம் பொருந்தும்.

  • பங்களிப்பு வைப்பு நிதி (Contributory Provident Fund)
  • அனைந்திந்திய சேவைகள் வருங்கால வைப்பு நிதி (All India Services Provident Fund)
  • ரயில்வே வைப்பு நிதி (State Railway Provident Fund)
  • ஜெனரல் வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்) - [General Provident Fund (Defence Services)]
  • இந்திய ஆர்டினன்ஸ் துறை வருங்கால வைப்பு நிதி (Indian Ordinance Department Providence Fund)
  • இந்திய ஆர்டினன்ஸ் ஆலை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி (Indian Ordinance Factories Workmen's Provident Fund)
  • இந்திய கடற்படை கப்பல் துறை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி (Indian Naval Dockyard Workmen's Provident Fund)
  • பாதுகாப்பு சேவை அதிகாரிகள் வருங்கால வைப்பு நிதி (Defence Services Officers Provident Fund)
  • ராணுவ படை அதிகாரிகள் வருங்கால வைப்பு நிதி (Armed Forces Personnel Provident Fund)

மேலும் படிக்க

விவசாயிகள் வங்கி கணக்கில் மானியக் கடன்: விரைவாக விண்ணப்பிக்கவும்!

FD வட்டி உயர்வு: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)