News

Tuesday, 29 December 2020 07:31 PM , by: KJ Staff

Credit : Dinamalar

நம் நாட்டில் சின்ன வெங்காயமானது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் பெருமளவு பயிரிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதிகமாக சாகுபடி (Yield) செய்யப்படுகிறது.

சின்ன வெங்காய உற்பத்தி குறைவு:

வைகாசி, புரட்டாசி மற்றும் தைப் பட்டங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு, சமீப காலமாக கார்த்திகைப் பட்டத்திலும் பயிரிடப்படுவதால், ஆண்டு முழுவதும் சந்தைக்கு வெங்காய வரத்து உள்ளது. இத்தகைய சூழலில் புரட்டாசி / கார்த்திகை பட்டங்களில் பெரம்பலூர், துறையூர் மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயமானது, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் காரணமாக உற்பத்தி (Production) மற்றும் தரம் (Quality) குன்றி காணப்படுகிறது. தொடர்ச்சியான மழை மற்றும் ஏதுவான காலநிலை காரணமாக இந்த தாக்கங்கள் முக்கியமாக, வெங்காயம் பயிரிடப்படும் பகுதிகளில் சுமார் 9,000 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படுகின்றது என வர்த்தக மூலகங்கள் தெரிவிக்கின்றன.

சந்தை ஆய்வுகள்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் (Center for Agricultural and Rural Development Research) இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் (Price Forecasting Scheme), கடந்த 10 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலை மற்றும் சின்ன வெங்காயம் பயிரிடப்படும் முக்கியப் பகுதிகளில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

விலை மற்றும் சந்தை ஆய்வுகளின் படி நல்ல தரமான சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை வரும் காலங்களில், கிலோவிற்கு ரூ.50-க்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் - 641 003
தொலைபேசி - 0422-2431405

தொழில்நுட்ப விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:

பேராசிரியர் மற்றும் தலைவர்
காய்கறிப் பயிர்கள் துறை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் - 641 003
தொலைபேசி - 0422-6611374

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாயிகளே விதை ஈரப்பதத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்!

அனைத்து விதமான வெங்காய ஏற்றுமதிக்கும் ஜனவரி 1 முதல் மத்திய அரசு அனுமதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)