மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 October, 2022 5:01 PM IST
Gujarat: Morbi Cable Bridge Accident, Prime Minister's Trip Cancelled: Why? what is the reason?

மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தையடுத்து, அகமதாபாத்தில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த சாலைக் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை, பாஜக குஜராத் ஊடகப் பிரிவு, "பிரதமர் மோடியின் மெய்நிகர் முன்னிலையில் நடைபெறவிருந்த பேஜ் கமிட்டி சினே மிலன் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தது.

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக குஜராத் ஊடக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் யக்னேஷ் டேவ், மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளதை அடுத்து இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்ற முடிவை உறுதிப்படுத்தினார்.

2,900 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை அர்ப்பணிப்பதற்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி திங்கள்கிழமை தெரிவித்தார்.

"ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேஞ்ச் ஐஜிபி தலைமையில் இன்று விசாரணை தொடங்கும்," என்று அவர் ஒரு ஊடக சந்திப்பில் கூறியிருப்பதை, தனியார் ஊடக நிறுவனம் மேற்கோள் காட்டியது.

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், "அனைவரும் இரவு முழுவதும் உழைத்தனர். கடற்படை, NDRF, விமானப்படை மற்றும் இராணுவம் விரைவாக சென்றடைந்தது. 200 க்கும் மேற்பட்ட நபர்கள் இரவு முழுவதும் (தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக) பணியாற்றியுள்ளனர்" எனவும் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் மோடி நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது. "மோர்பியில் நடந்த விபத்து குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல் மற்றும் பிற அதிகாரிகளிடம் பிரதமர் பேசினார். மீட்புப் பணிகளுக்காக குழுக்களை அவசரமாக அணிதிரட்ட அவர் கோரியுள்ளார். நிலைமையை உன்னிப்பாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்," என்று PMO ட்வீட் செய்தது.

பிரதமர் நிவாரணத் தொகையாக ரூ.2 லட்சம் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் PMNRF இலிருந்து வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

SBI Clerk Admit Card 2022 Download today!

வேளாண் கருவிகள் வாங்க 50%மானியம்!

English Summary: Gujarat: Morbi Cable Bridge Accident, Prime Minister's Trip Cancelled: Why? what is the reason?
Published on: 31 October 2022, 05:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now