வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 11 May, 2022 6:23 AM IST
Half ticket system for children above 5 years of age came into effect!

அரசு பஸ்களில், 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அரை டிக்கெட் எடுக்கலாம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அரசு பஸ்களில், 3 வயது வரை இலவச பயணம் அனுமதிக்கப்பட்டு இருந்தது. நகர பஸ்களைத் தவிர, மற்ற பஸ்களில், 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, 'அரை டிக்கெட்' என்ற பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

அரை டிக்கெட் (Half Ticket)

இந்நிலையில், போக்குவரத்து மானிய கோரிக்கையின் போது, துறை அமைச்சர் சிவசங்கர், இனி, 5 வயது வரை குழந்தைகளுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படும் என்றும், 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு அரை டிக்கெட் சலுகை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

இதையடுத்து, நேற்று முதல், 5 வயது வரை உள்ள குழந்தைகளை, அனைத்து பஸ்களிலும் இலவச பயணத்துக்கு அனுமதிக்கலாம் என நடத்துனர்களுக்கு, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது: தொலைதுார பஸ்களில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது.

அந்த குழந்தைகளை மடியில் வைத்து அழைத்துச் செல்வதில் சிரமம் உள்ளதாக சிலர் கருதுகின்றனர். அவ்வாறு கருதுவோர், குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்தி இருக்கை பெறலாம். முன்பதிவிலும் இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க

புதிய வசதிகளுடன் வாட்ஸ்அப்: புதிய அப்டேட் என்ன?

சிவகங்கை: விவசாயி வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

English Summary: Half ticket system for children above 5 years of age came into effect!
Published on: 11 May 2022, 06:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now