மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 January, 2022 10:58 AM IST

நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவு மற்றும் நாடாளுமன்ற ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கும் கொரோனா என எங்கும் கொரோனா மயமாக இருப்பதால், இந்த முறைத் திட்டமிட்டபடி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

2 வாரங்களுக்கு முன்பு (2 weeks ago)

மத்திய பட்ஜெட் வரும் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டானது அதிகமான பக்கங்களில் அச்சிடப்பட்டு துணிப்பைகளில் கட்டப்படும். இந்த அச்சிடும் பணிகள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்பே தொடங்கி விடும்.

டிஜிட்டல் பட்ஜெட் (Digital budget)

பட்ஜெட் ஆவணங்களில் நூற்றுக்கணக்கான பிரதிகள் அச்சிடப்படுவதால் ஏராளமான காகிதம் உள்ளிட்ட பொருட்களின் தேவை உள்ளது. இதையடுத்துக் காகிதப் பயன்பாட்டை குறைக்கும் வகையில் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் ஆவணங்களை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதன் விளைவாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட்டை டிஜிட்டல் முறையில் தாக்கல் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
.அனைத்தும் 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டது. பட்ஜெட் ஆவணங்களை பார்ப்பதற்காக எம்.பி.,க்களுக்கு என தனியாக செயலி உருவாக்கப்பட்டது.இதற்கென,தனி 'செயலி'பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி, பட்ஜெட் தாக்கல் தினத்துக்கு 10 நாட்களுக்கு முன் துவங்கும். இந்த பணி துவங்குவதை குறிக்கும் வகையில் 'அல்வா கிண்டும்' நிகழ்ச்சி நடக்கும்.

நிகழ்ச்சி ரத்து (Show cancelled)

வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை 'சூட்கேசில்' வைத்து மத்திய நிதி அமைச்சர் எடுத்து வருவார். அதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றினார். துணிப் பையில் வைத்து எடுத்து வந்தார். கடந்தாண்டு 'டேப்லெட்'டை பையில் வைத்து எடுத்து வந்தார்.தற்போது ஆவண பாதுகாப்புக்காக மட்டும் சில பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட உள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு அல்வா கிண்டும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பட்ஜெட் தாக்கலாகுமா?

இதனிடையே மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கொரோனா, ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கும் கொரோன என எங்கும் கொரோனா மயமாக இருப்பதால், இந்த முறைத் திட்டமிட்டபடி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதிலும் சிக்கல் நீடிக்கிறது. முன்பெல்லாம் இந்த முறை பட்ஜெட்டில் குறிப்பிட்ட அம்சங்கள் இடம்பெறுமா? என எதிர்பார்த்தநிலை மாறி, இம்முறை பட்ஜெட்டேத் தாக்கலாகுமா என எதிர்பார்க்கும் நிலை உருவாகிவிட்டது.

மேலும் படிக்க...

பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு, உர மானியத்தின் நிலவரம் 

பட்ஜெட் 2022: விவசாய சட்டங்களை ரத்து செய்த பிறகு, விவசாயத் துறையை மேம்படுத்த நடவடிக்கை

English Summary: Halwa preparation stops-Problem in Budget Filing!
Published on: 27 January 2022, 10:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now