News

Tuesday, 23 August 2022 08:37 AM , by: R. Balakrishnan

Train Travel

முன்பதிவு இல்லாத பயணியர் பயன் பெறும் வகையில், 24 விரைவு ரயில்களின் சேவையில், தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது. இதனால், முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யும் ரயில் பயணிகளுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

தெற்கு ரயில்வே (Southern Railway)

தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயின் பல்வேறு வழித்தடங்களில், முன்பதிவு இல்லாத பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, இந்த பயணியர் பயன் பெறும் வகையில், தேர்வு செய்யப்பட்ட 24 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ரயில்களின் தடத்தில், ஒரு பகுதியில் மட்டும் சில பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம் மங்களூர், எழும்பூர் - கேரளா மாநிலம் கொல்லம், எழும்பூர் - ராமேஸ்வரம், ராமேஸ்வரம் - எழும்பூர், துாத்துக்குடி - கர்காடகா மாநிலம் மைசூர், சென்ட்ரல் - நாகர்கோவில் உள்ளிட்ட விரைவு ரயில்களில், ஓரிரு பெட்டிகள் மட்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது

வரும் அக்டோபர் 15 முதல் படிப்படியாக அமலாகும் என அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க

நவீன வசதிகளுடன் வந்தே பாரத் ரயில்: பயணிகளுக்கு குட் நியூஸ்!

அட இதுக்கெல்லாம் போட்டியா? ஜப்பானில் விநோதம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)