சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 10 June, 2022 6:59 PM IST
Have you got a jewelry loan? No more pensions!

வங்கிகளில் லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் பெற்றிருக்கும் முதியோருக்கு, ஓய்வூதியத் தொகை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு முதியோர் ஓய்வூதியம் பெறுவோரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 

20 ரூபாய் ஓய்வூதியம்

தமிழகத்தில், ஆதரவின்றி, உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் முதியோருக்காக, மாதந்தோறும் நிதியுதவி அளிக்கும் வகையில், ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியத்திட்டம், 1962ல் தொடங்கப்பட்டபோது, முதற்கட்டமாக மாதம் 20 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இந்தத் தொகைப் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

அரசு அதிரடி

இந்நிலையில் தகுதியில்லாத முதியவர்களும், 1000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெற்று வருவதாகப் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், தி.மு.க அரசு சார்பில், நலத்திட்ட நிதியுதவி பெறும் பயனாளிகள், தகுதியானவர்கள் தானா என்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் உண்மைத்தன்மை கண்டறிய, அவர்களிடம் ஆதார் எண் பெறப்பட்டது.

லட்சம் ரூபாய்

இதன் மூலம், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ள விபரங்கள், அவர்களது பெயரில் சொத்துக்கள் இருக்கிறதா என்பது போன்ற விபரங்கள் கண்டறியப்பட்டு, பட்டியலிடப்பட்டுள்ளன. ஓய்வூதியம் பெறும் முதியோர் பெயரில், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் இருந்தால், நிதியுதவியை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் நிறுத்தம்

இதுகுறித்து, வருவாய்த்துறையினர் கூறியதாவது:

ஆதரவின்றி, உணவுக்கு வழியில்லாமல் இருப்போருக்கு நிதியுதவி வழங்குவதே ஓய்வூதிய திட்டத்தின் நோக்கம். வசதி உள்ளவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்படுகிறது. பலருக்கு சொந்தமாக வீடு இருக்கிறது. சிலர், மகன் அல்லது மகள் வீட்டில் வசிக்கின்றனர். வசதியோடு இருப்பவர்களும் நிதியுதவி பெறுவது தெரிய வந்திருப்பதால், நிதியுதவி நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க...

ஓடிப்போன மனைவி-போலீஸில் புகார் அளித்த 2 கணவர்கள்!

விவசாயிகளுக்கு 60% மானியத்தில் மதிப்புக் கூட்டுப்பொருட்கள்!

English Summary: Have you got a jewelry loan? No more pensions!
Published on: 10 June 2022, 06:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now