மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 November, 2021 1:52 PM IST
Monitor Neww Born Child

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 3 கோடி குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 30 லட்சம் குழந்தைகள் மரணிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில், ஓராண்டில் நடக்கும் 5-6 ஆயிரம் பிறந்த குழந்தை மரணங்களில் 15% முதல் 20% நிமோனியாவால் நடக்கின்றன. பிறந்து 30 நாட்களுக்குள்ளான குழந்தை மரணங்களுக்கான முதன்மையான காரணமாக நிமோனியாவாகவே உள்ளது. எனவே நிமோனியா காய்ச்சலை விரைந்து கண்டறியும் பயிற்சியை சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது.

நிமோனியா தாக்கம்

Social Awareness and Action to Neutralise Pneumonia Successfully என்ற மத்திய அரசு திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை, திருச்சி, சேலம் ஆகிய மையங்களில் இந்த பயிற்சிகள் இந்த மாதம் நடக்கவுள்ளன. குழந்தை நல அரசு மருத்துவர்கள் 500 பேர், 45 மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலகர்கள், 45 மாவட்ட மகப்பேறு மற்றும் குழந்தை நல அலுவலர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். தாய்ப்பால் முறையாக கிடைக்காத குழந்தைகள், சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத குழந்தைகள், வீட்டுக்குள்ளாக உள்ள காற்று மாசு ஆகிய காரணங்களால் நிமோனியா தாக்கம் அதிகமாகிறது.

இது குறித்து மாநில பச்சிளங் குழந்தைகள் நல அதிகாரி மருத்துவர் சீனிவாசன் கூறுகையில், "நவம்பர் 15 முதல் 21ம் தேதி வரை, பச்சிளம் குழந்தைகள் வாரம் கொண்டாடப்படுகிறது. எனவே இந்த வாரத்தில் 0-30 நாட்கள் மட்டுமேயான குழந்தைகள் மருத்துவமனைகளில் இருந்தாலும் வீடுகளிலும் இருந்தாலும் அனைவரையும் நேரில் சந்தித்து, நிமோனியா விழிப்புணர்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதற்காக அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

எக்ஸ் ரே எடுப்பதற்கு முன்பாகவே முதல் கட்ட அறிகுறிகளை வைத்தே நிமோனியாவை கண்டறிவதற்கான பயிற்சியும் வழங்கப்படும். நோயின் எந்த கட்டத்தில் குழந்தை உள்ளது என்பதை கண்டறிந்து எந்த நிலையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். நிமோனியா என்பது தடுக்கக்கூடியதே. அதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்" என்றார்.

மேலும் படிக்க

மழைக்கால மின் விபத்துகளைத் தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!

60 ஆண்டு கால கனவு நனவாகுமா? அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் விறுவிறு!

English Summary: Health department to monitor all newborns from tomorrow!
Published on: 14 November 2021, 06:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now