மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 April, 2021 6:55 PM IST
Credit : Daily Thandhi

சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்துள்ள இன்றைய சூழலில், இயற்கை ஏதாவது ஒரு வகையில், மனிதனின் உடல் நலனை காக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், சென்னைக்கு அருகே உள்ள கிராமங்களில், கீரை விவசாயம், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கீரை விவசாயம்

சென்னை, செங்குன்றம் அருகே, கோணிமேடு, லட்சுமிபுரம், மேட்டுப்பாளையம், பம்மதுகுளம், எராங்குப்பம், கிருஷ்ணாம்பேட்டை, பழைய பம்மதுகுளம், சரத்கண்டிகை உள்ளிட்ட கிராமங்கள், பசுமை பின்னணியில், கீரை விவசாயத்தின் முதுகெலும்பாக உள்ளன. இந்த கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில், ஆண், பெண் என பலரும், விவசாயம் மற்றும் ஆடு, மாடு மேய்த்தல் தொழிலை உற்சாகமாக செய்து வருகின்றனர். இங்கு, 100 ஏக்கரில், அரைகீரை, சிறு கீரை, முருங்கை கீரை (Drumstick), தண்டு கீரை, பொன்னாங்கன்னி கீரை, புளிச்ச கீரை, மணத்தக்காளி கீரை, பாளை கீரை, முடக்கத்தான் கீரை, கரிசலாங்கன்னி, வெண்டைக்காய், பாகற்காய், காராமணி உள்ளிட்டவை விளைகின்றன.இந்த கிராமங்களில் இருந்து தினமும், காலை, மாலை இரு வேளையும், அனைத்து வகையான கீரையும்
பறிக்கப்பட்டு, 15 முதல், 20 டன் வரை, சரக்கு வாகனங்கள் மூலம், சென்னை சந்தைக்கு (Chennai Market) கொண்டு செல்லப்படுகிறது.

விற்பனை

சென்னை, அம்பத்துார், ஆவடி, தி.நகர், அண்ணாநகர், கோயம்பேடு என, பெரிய சந்தைகள் மட்டுமின்றி, செங்குன்றம், மாதவரம், கொளத்துாரில் உள்ள சிறிய கடைகளுக்கும், எடுத்து செல்லப்படுகின்றன. கீரை தோட்டங்களில், 8 முதல் 10 ரூபாய்க்கு கிடைக்கும் கீரை கட்டு, சென்னை சந்தைகளில், 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உரிய நேரத்தில் சந்தைக்கு சென்றால் தான், மொத்தமும் விற்பனையாகும். காலதாமதமானால், மறுநாள் இருப்பு வைத்து விற்க முடியாத நிலையில், குப்பையில் தான் வீசப்படும். கடந்தாண்டு கொரோனா ஊரடங்கால் (Corona Lockdown) மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்ட நிலையில், மக்கள், தங்களின் உடல் நலம் காக்க, கீரை, காய்கறிகளை மட்டுமே வாங்கி பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கீரை விதை மற்றும் உரத்தின் விலை அதிகரித்தாலும், மருத்துவ குணமுள்ள, உடல் நலம் காக்கும் கீரையை விளைவித்து, உரிய நேரத்தில் அறுவடை (Harvest) செய்து, மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கீரை, காய்கறிகளுக்கான வரவேற்பு, கடந்தாண்டு முதல் அதிகரித்து உள்ளது எனறு பழைய பம்மதுகுளம் விவசாயிகள் தெரிவித்தனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கோடை வெயில் சுட்டெரிப்பதால், பனை நுங்கு விற்பனை அமோகம்!

கோடை உழவில் ஆர்வம் காட்டும் திருப்பரங்குன்றம் விவசாயிகள்!

English Summary: Healthy greens in the summer! Enthusiastic working farmers
Published on: 19 April 2021, 06:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now