மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 July, 2019 1:28 PM IST

தென்மேற்கு பருவ மழை காரணமாக மும்பையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களில் 400 செ.மீ மழை பதிவாகியுள்ளதால் மும்பை மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புறநகரின் மால்ட் பகுதியில் கனமழை காரணமாக பிம்ரிபாடாவில் சுற்றுசுவர் இடிந்து விழுந்து 13 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.  புனேயில் அமேகான் பகுதியில் கல்வி நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகி உள்ளனர். மற்றும் சின்காட் இன்ஸ்டியூட்டில் கட்டிடப்பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் தங்கியிருந்த அறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் 6 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவங்களில் மீட்கப்பட்டவரக்ள் மற்றும் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்கு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து முடங்கிது. அந்தேரி, வில்லே பர்லே, ஜோகேஸ்வரி, தாசிகர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் முற்றிலும் சூழ்ந்துள்ளது. பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்ல முடியாமல் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர், இதனால் மும்பையில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் மற்றும் விமான சேவை ரத்து

மும்பை சர்வதேச விமானநிலைத்தில் ஓடுபாதை நீரில் மூழ்கி உள்ளதால் 54 விமானங்களை வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கி உள்ள காரணத்தால் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மற்ற இடங்களில் இருந்து மும்பைக்கு வந்து சேரும் ரயில்களை வேறு வழி இன்றி ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: heavy rainfall in mumbai: 19 people dead, railway and airway services were stopped
Published on: 02 July 2019, 01:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now