மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 November, 2021 3:00 PM IST
Red Alert in tamilnadu

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் குறைந்தது 106 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் 59 பேரின் குடும்பங்களுக்கு ரூ.2.36 கோடியும், மழையால் ஏற்பட்ட விபத்துக்களில் காயமடைந்த 13 பேருக்கு ரூ.55,900ம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதுதவிர கால்நடைகளை இழந்தவர்களுக்கு ரூ.2.84 கோடியும், வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு ரூ.10.17 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

கடந்த 24 மணி நேரத்தில், 209 கால்நடைகளும், 5,600 கோழிகளும் இறந்துள்ளன, 1,139 குடிசைகள் மற்றும் 189 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அக்டோபர் 1 முதல் நவம்பர் 29 வரை, தமிழகத்தில் சராசரியாக 635.42 மிமீ மழை பெய்துள்ளது, இது இந்த காலகட்டத்துக்கான இயல்பை விட (352.60 மிமீ) 80 சதவீதம் அதிகமாகும் என்று அமைச்சர் கூறினார். 2015ல் சென்னையில் 1,610 மிமீ மழை பெய்த நிலையில், இதுவரை 1,866 மிமீ மழை பெய்துள்ளது.

மாநிலம் முழுவதும் 182 நிவாரண முகாம்களில் 15,164 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறினார். சென்னையில் 13 நிவாரண மையங்களில் 1503 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க:

தங்கம் விலை: தங்கத்தின் விலை உயர்வு! விலை என்ன?

ரூ.50,000க்கும் குறைவான விலையில் TVS Apache 180

English Summary: Heavy rains: 106 killed in Tamil Nadu
Published on: 30 November 2021, 03:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now