மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 August, 2019 11:02 AM IST

தமிழகத்தில் தென் மேற்கு பருவ காற்று வலுவடைந்ததை தொடர்ந்து  மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன.

தென் மேற்கு பருவ காற்று காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகதில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழையும், மற்ற சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவிலிருந்து இன்று காலை வரை தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதே போல் வேலூர் மாவட்டத்திலும் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், நெல்லை, காஞ்சிபுரம், திண்டுக்கல், தர்மபுரி, தஞ்சாவூர், உட்பட 22 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் லேசான மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய  வாய்ப்புள்ளது. சென்னையில் அதிக பட்ச வெப்பநிலையாக 36 டிகிரியும், குறைந்த பட்ச வெப்பநிலையாக 27 டிகிரியும் பதிவாகக் கூடும். நேற்றைய நிலவரம் படி சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலான மழை பதிவாகியுள்ளது. மேலும் அண்ணாநகர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, கிண்டி, அண்ணா சாலை, நங்கநல்லூர், மடிப்பாக்கம், போரூர், வளசரவாக்கம்,  வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று காலை வரை பலத்தை மழை பெய்தது.

https://tamil.krishijagran.com/news/again-heavy-rains-started-in-western-ghats-next-2-days-heavy-rainfall-likely-to-be-occurs-in-tamil-nadu/

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: Heavy Rains! Strenthening of South west monsoon In Tamil Nadu and Pondicherry: announced leave for vellore schools and colleges
Published on: 17 August 2019, 11:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now