மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 May, 2022 12:24 PM IST
Helmets are mandatory for those who sit behind the bike....

சென்னை மாநகரப் பகுதிகளில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதை கண்காணிக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாநகரில் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவும் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2021ஆம் ஆண்டு சென்னையில் நடந்த சாலை விபத்துகளை ஆய்வு செய்ததில் இரு சக்கர வாகன விபத்துகளில் 611 பேர் உயிரிழந்துள்ளனர். 3,294 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 477 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த 134 பயணிகளும் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததற்காக உயிரிழந்துள்ளனர். மேலும், இரு சக்கர வாகனங்களில் சென்ற 2,929 பேரும், பின் இருக்கையில் அமர்ந்து சென்ற 365 பேரும் காயமடைந்துள்ளனர்.

கடந்த 5 மாதங்களில் இருசக்கர வாகனங்களில் சென்ற 841 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதில் 741 இரு சக்கர வாகனங்களும், 127 பேர் பின் இருக்கையில் பயணித்தவர்களும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் உயிரிழப்பதையும், காயம் அடைவதையும் குறைக்க சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விதிகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் இன்று (மே 23) முதல் சிறப்பு வாகன சோதனை நடத்தப்படுகிறது.

மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கர், இரு சக்கர வாகனத்தில் ஓட்டுனர் மற்றும் பின் இருக்கையில் இருப்பவர் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறினார்.

மேலும், “ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்தது. உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். ஹெல்மெட் கட்டாய உத்தரவு கடைபிடிக்கப்படுகிறதா என 312 சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க:

குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு!

ஹெல்மெட் அணியாததன் விளைவு: உலக அளவில் 10 லட்சம் பேர் இறப்பு!

English Summary: Helmets are mandatory for those who sit behind the bike from today!
Published on: 23 May 2022, 12:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now