News

Sunday, 02 April 2023 01:14 PM , by: R. Balakrishnan

High speed internet

தமிழக அரசானது, மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு குறைந்த செலவில் அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

அதிவேக இணைய சேவை (High speed internet)

தமிழகத்தில் கடந்த மார்ச் 20ம் தேதி அன்று நடந்து முடிந்த பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு, தற்போது அரசு துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதங்கள் தினமும் துறை வாரியாக நடைபெற்று வருகிறது. அரசின் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான எதிர்க்கட்சியினர் மற்றும் இதர கட்சியினரின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

நேற்று, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பான அரசின் புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மனோ.தங்கராஜ் பேசியுள்ளார். அப்போது, மாநிலம் முழுவதும் உள்ள அரசின் அலுவலகங்கள் மற்றும் குடும்பங்களுக்கும் அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்கான திட்டம் உள்ளதாகவும், இதற்கான செயல்பாடுகள் விரைவில் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.

அரசு அலுவக இணைய பணிகளுக்கு ரூ.184 கோடியும், 20,000 தமிழக குடும்பங்களுக்கான குறைந்த செலவிலான அதிவேக இணையத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

Post Office கணக்கு இருக்கா? அப்போ இது கட்டாயம்: அரசின் முக்கிய உத்தரவு!

ஜூன் மாதம் வரை கோடை வெப்பம் சுட்டெரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)