மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 March, 2021 6:34 PM IST
Credit : Daily Thandhi

தஞ்சையில் கருவேப்பிலை விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட கருவேப்பிலை (Curry leaves) தற்போது ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையலில் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படும் கருவேப்பிலை சில நாட்களுக்கு முன்பு விலை உயர்ந்து காணப்பட்டது. கருவேப்பிலையில் மருத்துவகுணங்கள் (Medical benefits) மற்றும் பல்வேறு சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. காரத்துடன் கூடிய கசப்பு சுவையை கொண்ட கருவேப்பிலையை சைவ-அசைவ உணவுகளில் சேர்த்து கொள்கின்றனர்.

விலை உயர்வு

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சாகுபடி (Cultivation) செய்யப்படும் கருவேப்பிலை தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் மார்க்கெட் மற்றும் சில்லறை காய்கறி கடைகளில் காய்கறி வாங்குவோர்களுக்கு இலவசமாக கருவேப்பிலை கொடுப்பது வழக்கம். கருவேப்பிலை கடந்த வாரம் மொத்த விற்பனை (Whole sale) கடையில் கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்ததுடன் கருவேப்பிலையை விலை கொடுத்து குறைந்த அளவே வாங்கி சென்றனர்.

பூச்சி தாக்குதல்

இந்த நிலையில் தஞ்சை தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் கருவேப்பிலை விலை குறைந்துள்ளது. ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட கருவேப்பிலை (Curry leaves) தற்போது விலை குறைந்து, ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சை தற்காலிக மார்க்கெட் வியாபாரிகள் (Merchants) கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பருவம் தவறி பெய்த மழையாலும், நிவர் மற்றும் புரெவி (Nivar & Burevi) புயல்களாலும் கருவேப்பிலை சாகுபடி பெரிதும் பாதிப்பு அடைந்தது. மேலும் பனி பொழிவுகளால் பல்வேறு பூச்சி தாக்குதலும் (Pest attack) ஏற்பட்டது.

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

இதனால் கருவேப்பிலை வரத்தும் குறைவாக காணப்பட்டது. தற்போது மழை இல்லாததாலும், பனி குறைந்துள்ளதாலும், வெயில் அடிக்க ஆரம்பித்ததாலும் கருவேப்பிலை விளைச்சல் அதிகமாக உள்ளது. மேலும் தொடர்ந்து இதே காலநிலை இருந்தால் கருவேப்பிலை விளைச்சல் அதிகரிக்கவும், மேலும் விலைகுறையவும் வாய்ப்பு உள்ளது. சில நாட்கள் வரை விலை அதிகரித்து காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த இல்லத்தரசிகள் தற்போது விலை குறைந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

நெல்மணிகளை போரடிக்க மாடுகளுக்கு பதில் யானை! மதுரையில் பாரம்பரிய முறை மீட்டெடுப்பு!

முதல் நாளே போடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஓபிஎஸ்!

English Summary: Housewives are happy with the low price of curry leaves
Published on: 12 March 2021, 06:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now