News

Tuesday, 16 March 2021 11:12 AM , by: Elavarse Sivakumar

இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் வங்கி (IPPB) என்ற மொபைல் பயன்பாடு மூலம், முதலீட்டாளர்கள் அஞ்சல் அலுவலகத்திற்குச் செல்லாமலேயே அஞ்சலகத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

செயல்முறைகள் (Processes)

IPPB மூலம் நீங்கள் எவ்வாறு ஒரு கணக்கைத் திறக்க முடியும் என்பதற்கான முழு செயல்முறைகளையும் இங்கு அளிக்கிறோம்.

ஆன்லைன் கணக்கைத் தொடங்க (Start an online account)

1. உங்கள் மொபைல் தொலைபேசியில் IPBP மொபைல் (Post Office) வங்கி பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.

2.IPBP மொபைல் வங்கி பயன்பாட்டைத் திறந்து 'Open Account' என்பதைக் கிளிக் செய்யவும்.

3. உங்கள் Pan Card எண் மற்றும் ஆதார் அட்டை எண்ணைப் பதிவு செய்யவும்.

4. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐ உள்ளிடவும்.

5. உங்கள் தாயின் பெயர், கல்வித் தகுதி, முகவரி மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தகவல்களைக் கொடுங்கள்.

6. முழுமையான தகவல்களைச் சமர்ப்பித்த பிறகு, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

7. உங்கள் கணக்கு குறுகிய காலத்தில் தபால் நிலையத்தில் திறக்கப்படும்.

8. இந்த டிஜிட்டல் சேமிப்பு (Digital) கணக்கு ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்,

9.வழக்கமான சேமிப்புக் கணக்கு திறக்கப்படும் ஒரு வருடத்திற்குள் முழுமையான பயோமெட்ரிக் சான்றிதழைப் பூர்த்தி செய்யவும்.

மாத வருமான திட்டம் (Monthly Income Plan)

அஞ்சலகத்தில் மாத வருமான திட்டம் மிகச் சிறந்த வருமானத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் Joint Account திறந்து அதில் 9 லட்சம் ரூபாயை ஒரே நேரத்தில் டெபாசிட் செய்தால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் 4950 ரூபாய் சம்பாதிக்கலாம். அசல் மீதான வருடாந்திர வட்டி ரூ .59,400 6.6 சதவீதம் என்ற விகிதத்தில் உள்ளது.

இந்த சூழலில், உங்கள் வட்டியின் மாதாந்திர தொகை ரூ .4,950 ஆகிறது, இந்தத் தொகையை நீங்கள் ஒவ்வொரு மாதமும் எடுக்கலாம். ஒவ்வொரு மாதமும் நீங்கள் பெறும் தொகை வட்டி அளவு மட்டுமே மற்றும் உங்கள் அசல் அப்படியே இருக்கும். Maturity இருக்கும்போது நீங்கள் அகற்றலாம்.

தகுதி (Qualifications)

  • 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் கணக்குத் தொடங்க முடியும்.

  • ஒரு கணக்கில் ஒரே நேரத்தில் 3 பெயர்கள் மட்டுமே இருக்க முடியும்.

  • 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் பெயரில் கணக்கு திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

  • பாதுகாவலர்கள் 10 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு தங்கள் பெயரில் திறக்கலாம்.

மேலும் படிக்க...

மானியம் பெற்று தருவதாக விவசாயிகளிடம் மோசடி!

கால்நடை துறையை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு- மத்திய அரசு

RBI கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - விவசாயிகளுக்கு என்ன பயன்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)