சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 14 September, 2022 1:09 PM IST
How to control leaf bligh
How to control leaf bligh

நெற்பயிரில் இலை உறை கருகல் நோய் பற்றி நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.வேளாண்மை அறிவியல் நிலையம், பூச்சியல்துறை உதவி பேராசிரியர் ராதாகிருஷ்ணன் ஆய்வின்போது உறுதி செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: நெற்பயிரில் இலை உறை கருகல் நோய் தாக்குதலின் அறிகுறிகளான முட்டை வடிவ அல்லது நீண்ட உருளை வடிவ வடிவத்துடன் கூடிய பழுப்பு கலந்த பச்சை நிற புள்ளிகள் ஆங்காங்கே இருக்கின்றது.

மேலும் அந்தப் புள்ளிகள் பெரிதாகும் போது நடுப்பாகம் சாம்பல் கலந்த வெண்மை நிறமாகவும் ஓரங்கள் கருமை கலந்த பழுப்பு நிறமாகவும் காணப்படும். நாளடைவில் இந்தப் புள்ளிகள் பெரிதாகி ஒன்றோடு ஒன்று இணைந்து அதில் உள்ள திசுக்களை அழிக்கப்படுவதால் இலைகள் முற்றிலும் பசுமை இழந்து சருகு போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும். இந்த தாக்குதல் வெளிப்புறத்தில் உள்ள இலைகளில் தொடங்கி பின்னர் உள் புறத்தில் உள்ள இலை உறைகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த நோய் பரவுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் ஆக காற்றின் ஈரப்பதம் 95 சதவீதத்திற்கு மேலும், வெப்பநிலை 30 லிருந்து 32 டிகிரி செல்சியஸ் அதாவது திடீரென்ற வெப்பநிலை உயர்ந்து அல்லது குறைந்த வெப்பநிலை தோன்றும் போது இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதிகப்படியான தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும்.

இந்த நோயை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கை ஒரு ஏக்கருக்கு 60 கிலோ மண்ணில் இடவேண்டும். செயற்கை பூஞ்சாணக் கொல்லிகளான கார்பண்டசிம் 50 டபள்யூ.பி 200 கிராம் அல்லது அசோக்ஸிஸ்ட்ரோபின் 200 மில்லி ஒரு ஏக்கருக்கு தெளித்து இந்த நோயை கட்டுப்படுத்தலாம். மேலும் தென்படும் பட்சத்தில் 15 நாட்களுக்கு பிறகு ஒரு முறை தெளித்து இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

ரூ.10000 கீழ் சிறந்த OPPO மொபைல் போன்கள்

செப்டம்பரில் 5 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்

 

English Summary: How to control leaf blight disease in rice?
Published on: 14 September 2022, 01:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now