15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 6 May, 2021 3:04 PM IST
corona vaccine
corona vaccine

Registration Online Covid-19 Vaccine: கொரோனா தொற்றுநோயைத் தடுக்க தடுப்பூசி பெற பதிவு செய்வது மிகவும் எளிதானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் cowin.gov.in வலைத்தளத்திற்குச் சென்று சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் 1 நிமிடத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்யலாம்.

கோவிட் -19 தடுப்பூசி பதிவு: (Covid-19 Vaccine Registration)

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் பரவுவதால், பலர் தொற்றுநோயிலிருந்து தங்களைக் காப்பாற்ற கொரோனா தடுப்பூசி பெற விரும்புகிறார்கள். இந்திய அரசு 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளது, இப்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். தடுப்பூசி போட நீங்கள் இன்னும் பதிவு செய்யவில்லை என்றால், cowin.gov.in க்குச் சென்று நீங்கள் எவ்வாறு இலவசமாக பதிவு செய்யலாம் என்பதைக் தெரிந்து கொள்ளுங்கள்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவின் போர்ட்டலுக்குச் சென்று தங்கள் தடுப்பூசியை (COVID-19 தடுப்பூசி) பதிவு செய்யலாம். இதற்காக, நீங்கள் அதிக நேரம் கொடுக்க வேண்டியதில்லை, ஆனால் சில முக்கியமான தகவல்களை நிரப்புவதன் மூலம் தடுப்பூசியை பதிவு செய்யலாம். நீங்கள் பதிவு செய்யும் போது எந்த தொகையும் வசூலிக்கப்படாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

 

Cowin.gov.in வலைத்தளத்தில் ஒரு நிமிடத்தில் தடுப்பூசி பதிவு செய்யுங்கள்:

நீங்கள் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்ய விரும்பினால், முதலில் நீங்கள் cowin.gov.in வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

இதற்குப் பிறகு, வலைதளத்தின் மேலே வலது பக்கத்தில் மஞ்சள் நிற வண்ணதில் பதிவு (Register) என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

இப்போது ஒரு புதிய திரை திறக்கும், அதில் தடுப்பூசிகளுக்கு ஒரு பதிவு இருக்கும். அதற்கு கீழே உங்கள் மொபைல் எண்ணை டைப் (type) செய்க.

இதற்குப் பிறகு உங்கள் மொபைல் போனில் OTP கிடைக்கும். OTP ஐப் பெற சிறிது நேரம் ஆகலாம். OTP ஐப் பெற்ற பிறகு, அதை உள்ளிடவும்.

இதற்குப் பிறகு, பதிவு போர்டல் திறக்கப்படும், அதில் கோரப்பட்ட அனைத்து தகவல்களும் நிரப்ப வேண்டும்.

உங்கள் அடையாள அட்டை தகவலை நிரப்பி, தடுப்பூசி போடும்போது அதை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

தடுப்பூசிக்கு பதிவுசெய்த பிறகு, உங்கள் பெயர் மற்றும் பிற தகவல்கள் எழுதப்பட்ட DOS 1 இன் கீழ் தோன்றும், அதன் கீழே ஒரு அட்டவணை விருப்பம் இருக்கும், அதைக் கிளிக் செய்க.

அதன் பிறகு, உங்கள் பகுதி பின் (PIN) எண்ணைத் டைப் செய்க அல்லது உங்கள் மாவட்ட பெயரைத் டைப் செய்து சர்ச் (Search)  என்பதைக் கிளிக் செய்க. 

இதற்குப் பிறகு, நாள் மற்றும் அருகில் இருக்கும் தடுப்பூசி மையங்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்கு முன்னால் வெளிப்படும். இதில் உங்கள் விருப்பப்படி நீங்கள் தேர்வு செய்யலாம்.


மேலும் படிக்க...

மீண்டும் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1.31 லட்சம் பேருக்கு மேல் நோய் தாக்கம்!!

கொரோனா 2-வது அலை : மீண்டும் சாவலான நிலை - பிரதமர் மோடி கவலை!!!

கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!

English Summary: How to register for corona vaccine at cowin.gov.in in one minute?
Published on: 06 May 2021, 03:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now