News

Friday, 09 September 2022 06:38 PM , by: T. Vigneshwaran

How to send money on WhatsApp?

வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு அம்சங்களை நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் நிறுவனம் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்தது. கூகுள் பே, பே டி எம் போல் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்தது. ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் யுபிஐ வசதி பலருக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது.

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்ப ‘₹’ ஐகானை கிளிக் செய்ய வேண்டும். 4 எளிய வழிகளை பின்பற்றி பணம் அனுப்பலாம்.

Step 1

முதலில் உங்கள் வங்கி கணக்கை யுபிஐ உடன் லிங்க் செய்ய வேண்டும். இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். வங்கி கணக்கு மற்றும் உங்கள் வாட்ஸ்அப் எண் இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். வங்கி கணக்குடன் இணைத்தவுடன் கூகுள் பே போல், யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களின் சேட் பக்கத்திற்கு சென்று Attach > Payment கொடுக்க வேண்டும்.

அடுத்து எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டு Next எனக் கொடுத்து Get Started ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும். accept our Payments Terms and Privacy Policy கொடுத்து, Accept கிளிக் செய்து Continue கொடுக்க வேண்டும்.

அடுத்து வங்கி பக்கத்தில், வங்கியின் பெயர் குறிப்பிட்டு, SMS> Allow கொடுக்க வேண்டும். முன்பே போனுக்கு அனுமதி கொடுத்திருந்தால், இது தேவையில்லை. டெபிட் கார்டு அனுமதி கொடுத்து, தகவல்கள் பதிவு செய்து Verify Card ஆப்ஷன் கொடுக்க வேண்டும்.

Step 3

இப்போது நீங்கள் பிரத்யேகமாக செட் செய்த UPI PIN எண்ணை குறிப்பிட வேண்டும். PIN செட் செய்யவில்லை என்றால் இப்போது செய்ய வேண்டும். அதனால் உங்கள் டெபிட் கார்டில் உள்ள கடைசி 6 இலக்க எண்ணை குறிப்பிட்டு, கார்டு expiration date கொடுக்க வேண்டும்.

Step 4

இதை கொடுத்த பிறகு, தொகை சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கிற்கு சென்றுவிடும். பணம் சென்று விட்டதா என்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட நபரின் வாட்ஸ்அப் சேட் பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம். அல்லது கடைசி டிரான்சாக்ஸன் payments settings மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க:

இன்று முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு அமல்

TNPSC Update: குரூப் 1 முதல் நிலை தேர்வு தேதி மாற்றம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)