மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 June, 2019 4:42 PM IST

பொதுத்துறை வங்கிகளில் ஐபிபிஎஸ் அமைப்பு ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி பிஓ 2019 (IBPS RRB PO 2019) தேர்வுக்கான அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. சேலம், புதுச்சேரி உட்பட 38 நகரங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முக்கிய தேதிகள் மற்றும் பனி விவரங்கள் கீழ் குறிப்புட்டுள்ளன.

விண்ணப்பிக்கும் நாட்கள்: 2019 ஜூன் 18 முதல் ஜூலை 4 வரை.

தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: ஜூலை 4, 2019

தேர்வு நடைபெறும் நாட்கள்

ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி பிஓ 2019 தேர்வின் முதல் நிலைத் தேர்வு இந்த ஆண்டு ஆகஸ்ட் 3, 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும் பிரதானத் தேர்வு செப்டம்பர் 22 ஆம் தேதி நடக்கும் என எதிர்பார்க்க படுகிறது..

இந்த ஆண்டு ஸ்கேல் II மற்றும் ஸ்கேல் III ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி அதிகாரிகளைத் தேர்வு செய்ய ஒரே தேர்வு செப்டம்பர் 22, 2019 அன்று நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி அலுவலக உதவியாளர் தேர்வுக்கான முதல் நிலைத் தேர்வு இந்த ஆண்டு ஆகஸ்ட் 17, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடக்கும் எனவும் பிரதானத் தேர்வு செப்டம்பர் 29, 2019 அன்று நடக்கும்.

குரூப் ஏ பிரிவு (ஸ்கேல் I, II மற்றும் III) அதிகாரிகளுக்கான நேர்முகத் தேர்வு நபார்டு வங்கியுடன் இணைந்து நடத்தப்படும். இது உத்தேசமாக நவம்பர் 2019ல் இருக்கலாம். பணி நியமனம் ஜனவரி 2020ல் நடைபெறும்.

காலி பணியிடங்கள்: 10,190

ஸ்கேல் I அதிகாரி பணி - 3312

ஸ்கேல் II அதிகாரி பணி - 1469

ஸ்கேல் III அதிகாரி பணி - 160

அலுவலக உதவியாளர் பணி – 5249

வயது வரம்பு

அலுவலக உதவியாளர் பணிக்கு 18 வயது முதல் 28 வயது வரை இருக்க வேண்டும். 02.06.1991 க்கு முன்போ 01.06.2001 க்குப் பின்போ பிறந்திருக்கக் கூடாது.

ஸ்கேல் I அதிகாரி பணிக்கு 18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். 03.06.1989 க்கு முன்போ 31.05.2001 க்குப் பின்போ பிறந்திருக்கக் கூடாது.

ஸ்கேல் II அதிகாரி பணிக்கு 21 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். 03.06.1987 க்கு முன்போ 31.05.1998 க்குப் பின்போ பிறந்திருக்கக் கூடாது.

ஸ்கேல் III அதிகாரி பணிக்கு 21 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். 03.06.1979 க்கு முன்போ 31.05.1998 க்குப் பின்போ பிறந்திருக்கக் கூடாது.

வயது வரம்பு தளர்வு

எஸ்சி(SC), எஸ்.டி(ST). பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி(OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு (PHYSICALLY CHALLENGED) 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவம்

Treasury Manager, Marketing Officer, Law Officer, Chartered Accountant, Agricultural Officer, Information Technology Officer, General Banking Officer உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவத் தேவை மாறுபடுகிறது.

தேர்வுக் கட்டணம்

ஸ்கேல் I, II மற்றும் III அதிகாரிகள் பணிக்கு விண்ணப்பிக்கும்  எஸ்.சி, எஸ்.டி, பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.100 கட்டணம். மற்றவர்களுக்கு கட்டணம் ரூ.600.

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் எஸ்.சி, எஸ்.டி, பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ரூ.100 கட்டணம். மற்றவர்களுக்கு கட்டணம் ரூ.600.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும். 

https://bit.ly/2XVDlYs

https://www.ibps.in/wp-content/uploads/CRP_RRB_VIII_ADVT_15_06_2019.pdf

https://www.google.com/search?q=(IBPS+RRB+PO+2019&rlz=1C1NHXL_enIN842IN842&oq=(IBPS+RRB+PO+2019&aqs=chrome..69i57.15768j0j9&sourceid=chrome&ie=UTF-8

K.SAKTHIRPIYA 

KRISHI JAGRAN 

English Summary: IBPS RRB PO 2019 recruitment notification: salem, pondichery and other 38 places
Published on: 17 June 2019, 04:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now