மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 June, 2021 7:49 PM IST
Credit : Dinamalar

உரக்கடைகளில் உரங்களை நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு மேல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட உரக்கடைகளின் உரிமம் (License) ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்தார்.

ஆய்வு

உரக்கடைகளில் 50 கிலோ மூட்டை டி.ஏ.பி. உரம் கூடுதல் விலையான ரூ.1,700 முதல் ரூ.1,900 வரை விற்கப்படுவதாக விவசாயிகள் மத்தியில் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் கூடுதல் விலைக்கே உரங்களை விற்கப்படுவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் எழுப்பி வந்தனர். இதனால் உரக்கடைகளில் நேரில் ஆய்வு (Inspection) செய்து சரியான விலைக்கே உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுத்தினார்.

விவசாயிகள் புகார்

இதைத்தொடர்ந்து பெரும்பாலான கடைக்காரர்கள் சரியான விலைக்கு உரங்களை விற்பனை செய்யத் தொடங்கினர். ஆனாலும் குண்டடம் நகரில் உள்ள ஒரு உரக்கடையில் டி.ஏ.பி. உரம் மூட்டை ரூ.1,700-க்கு தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் மத்தியில் புகார் தெரிவிக்கப்பட்டது. நேற்று குண்டடம் பகுதியில் மேட்டுக்கடை, குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உரக்கடைகளில் திடீரென வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) புனிதா, குண்டடம் வேளாண்மை உதவி இயக்குனர் பழனிகுமார் உள்ளிட்ட வேளாண் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

உரிமம் ரத்து

அப்போது குண்டடம் கோவை ரோட்டில் உள்ள ஒரு கடையில் ஆய்வு செய்தபோது அங்கு வந்த விவசாயிகள் இந்த கடையில் மீண்டும் கூடுதல் விலைக்கே டி.ஏ.பி. உரம் விற்கப்படுவதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடைக்காரருக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், இனி இதுபோன்ற புகார்கள் நிரூபணம் செய்யப்பட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். உடனடியாக அங்கிருந்த விவசாயிகளுக்கு டி.ஏ.பி. உரம் சரியான விலைக்கு வழங்கப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வை முடித்துக் கொண்டு கிளம்பியதும், அதன் பின்னர் அங்கு வந்த விவசாயிகளுக்கு டி.ஏ.பி. உரம் இல்லை என தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மீண்டும் செல்போன் மூலம் இணை இயக்குனரைத் தொடர்பு கொண்டு விவரத்தை கூறினர். உடனடியாக மீண்டும் அந்த உரக்கடைக்கு வந்த அதிகாரிகள் கடைக்காரரை கடுமையாக எச்சரித்துவிட்டு அனைத்து விவசாயிகளுக்கும் டி.ஏ.பி. உரம் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகளிடம் பேசும்போது, விவசாயிகள் உரம் வாங்க வரும்போது முறையாக ஆதார் எண் (Aadhar Number) கொடுத்து வாங்க வேண்டும். வாங்கும் மூட்டைகளுக்கு உரிய ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். ரசீது இல்லாமல் உரங்களை வாங்கக் கூடாது. ஏதேனும் புகார்கள் (Complaints) இருந்தால் உடனடியாக வேளாண்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றனர்.

மேலும் படிக்க

3 விதமான சலுகைகளில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தலாம்!அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

மேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

English Summary: If you sell fertilizer at extra cost, the license of the fertilizer shop will be canceled! Director of Agriculture warns during inspection!
Published on: 12 June 2021, 07:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now