News

Monday, 13 January 2025 04:34 PM , by: Muthukrishnan Murugan

Bacteria for Boost Crop Yield

மண்ணின் தரத்தை மேம்படுத்துவதோடு, பயிர் விளைச்சலை 50% அதிகரிக்கும் பாக்டீரியாக்களை ஐஐடி பம்பாய் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தொழில்நுட்ப நிறுவனமான பம்பாய் (IIT Bombay) ஆராய்ச்சியாளர்கள் மண்ணிலுள்ள மாசுபாட்டை நீக்கவும், விவசாய உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் ஒரு புதுமையான சுற்றுச்சூழல் நட்பு தீர்வைக் கண்டறிந்துள்ளனர். இது ரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களுக்கு நிலையான மாற்றாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆராய்ச்சியின் நோக்கம் என்ன?

சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் (Environmental Technology & Innovation) வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வறிக்கையில், குறிப்பிட்ட பாக்டீரியா இனங்கள் மண்ணில் உள்ள தீங்கு விளைவிக்கும் மாசுபடுத்தும் காரணிகளை சிதைக்கும் திறனை கொண்டுள்ளதையும், அதே நேரத்தில் தாவர ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியானது, நறுமண சேர்மங்கள், அழகுசாதனப் பொருட்கள், ஜவுளி மற்றும் பெட்ரோலியம் போன்றவை மற்றும் பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் மண் மாசுபடு குறித்து நடத்தப்பட்டது. இந்த சேர்மங்கள் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. மேலும், விதை முளைப்பு, தாவர வளர்ச்சி மற்றும் மகசூலை பாதிக்கின்றன. இந்த சிக்கலை சரி செய்வதற்கு தற்போது நடைமுறையிலுள்ள வழக்கமான முறைகள் மற்றும் மண் அகற்றும் முறைகள் போன்றவற்றிற்கு நிறைய செலவாகும் என்பதோடு அவை முழு தீர்வையும் வழங்காது என்பது தான் நிதர்சனம்.

உயிரியல் மற்றும் உயிரி பொறியியல் துறையைச் (Department of Biosciences and Bioengineering) சேர்ந்த பேராசிரியர் பிரசாந்த் பலேவின் வழிகாட்டுதலின் கீழ், ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக சூடோமோனாஸ் மற்றும் அசினெடோபாக்டர் வகைகளிலிருந்து  சில பாக்டீரியாக்களினை அடையாளம் கண்டுள்ளனர். அவை இந்த மாசுபடுத்திகளை பாதிப்பில்லாத சேர்மங்களாக உடைக்கும் திறன் கொண்டவை.

மேலும், இந்த பாக்டீரியாக்கள் மாசுபடுத்திகளை உட்கொண்டு அவற்றை நச்சுத்தன்மையற்ற வடிவங்களாக மாற்றுகின்றன. "அவை மாசுபட்ட சூழலினை இயற்கையா சுத்தம் செய்பவர்கள்" என்று பேராசிரியர் பலே குறிப்பிடுகிறார். மண் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில் அவற்றின் செயல்திறன் வலுவாக உள்ளது என ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சியை PhD ஆராய்ச்சியாளர் சந்தேஷ் பப்பாடே தனது மேற்பார்வையின் கீழ் மேற்கொண்டார்.

இந்த பாக்டீரியாக்கள் பல விவசாய நன்மைகளை வழங்குகின்றன. அவை பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற கரையாத ஊட்டச்சத்துக்களை தாவர-உறிஞ்சக்கூடிய வடிவங்களாக மாற்றுகின்றன, இரும்பு-உறிஞ்சும் சைடரோஃபோர்களை உருவாக்குகின்றன, மேலும் இண்டோலியாசெடிக் அமிலம் (IAA) போன்ற வளர்ச்சி ஹார்மோன்களை வெளியிடுகின்றன. இந்த நடவடிக்கைகள் ஒன்றாக, மண்ணை உரமாக்குகின்றன, தாவர ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன மற்றும் பயிர் விளைச்சலை கணிசமாக அதிகரிக்கின்றன.

பாக்டீரியா கலவைகளுடன் கூடிய சோதனைகள் கோதுமை, வெண்டைக்காய், கீரை மற்றும் வெந்தயம் போன்ற பயிர்களின் வளர்ச்சியில் 50% வரை அதிகரிப்பை உண்டாக்கியுள்ளன. இந்த பாக்டீரியாக்கள் தாவர பூஞ்சை நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகின்றன என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். என்சைம்கள் மற்றும் ஹைட்ரஜன் சயனைடை உற்பத்தி செய்வதன் மூலம், பாக்டீரியாக்கள் பாரம்பரிய இரசாயன பூஞ்சைக் கொல்லிகளைப் போலல்லாமல், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் தீங்கு விளைவிக்கும் பூஞ்சைகளைத் திறம்படத் தடுக்கின்றன. "இந்த பாக்டீரியாக்கள் தாவரங்களின் சுற்றுச்சூழலுக்கு உகந்த பாதுகாவலர்கள், தீங்கு விளைவிக்கும் பூஞ்சைகளை மட்டுமே குறிவைக்கின்றன," என்று பேராசிரியர் பலே குறிப்பிட்டார்.

Read more: மாவட்டத்திற்கு ஒருவர்..1 லட்சம் ரொக்கப்பரிசு: நீர்நிலைப் பாதுகாவலர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் பயன்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க நம்பிக்கையை அளித்தாலும், "தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும், வெவ்வேறு சூழல்களில் சோதிக்க வேண்டும் மற்றும் வணிகப் பொருட்களாக கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதால், பரவலான ஏற்றுக்கொள்ளலுக்கு சிறிது நேரம் எடுக்கும்" என்று பேராசிரியர் பலே தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில், வறட்சி மற்றும் பிற சுற்றுச்சூழல் அழுத்தங்களைச் சமாளிக்க இந்த நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் தாவரங்களுக்கு எவ்வாறு உதவக்கூடும் என்பதை ஆராய்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறியத் தொடங்கியுள்ளனர்.

Read more:

1176 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்- 5.48 லட்சம் மெ.டன் நெல்: அரசு கொடுத்த அப்டேட்

உலகளவில் 2 % வரை சரிவு கண்ட உணவுப் பொருட்களின் விலை: FAO ரிப்போர்ட்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)