மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 August, 2019 12:15 PM IST

வளர்த்து வரும் விஞ்ஞானம் நமது பெரும்பாலான வேலைகளை எளிதாக்கியுள்ளது. இல்லங்களில் தொடங்கி அலுவலகம், அலைகள் என எல்லா இடத்திலும் வந்து விட்டது. இப்பொழுது வேளாண்மையிலும் 'அக்ரிகாப்டர்' எனப்படும் ஹெலிகாப்டர் மூலம் பயிர்களுக்கு மருந்து அடிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா?

சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் விவசாயிகளின் வேலையை எளிதாக்கும் வகையில் பூச்சி கொல்லி மருந்தடிக்க கூடிய அக்ரிகாப்டர் என்னும் சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை வடிவமைத்துள்ளனர். பொதுவாக விவசாகிகள் பூச்சி கொல்லி மருந்தினை கைகளாலும் அல்லது சிறிய ரக இயந்திரங்களாலும் தெளிப்பதனால் உடல் நல குறைபாடு, சுவாச பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த 'அக்ரிகாப்டர்'  மூலம் தெளிக்கும் போது இவ்வகையான பிரச்சனைகள் வராது. மேலும் இதற்கு வேலையாட்கள் யாரும் பெருமளவில் தேவையில்லை.

நவீன அக்ரிகாப்டர் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.  இதில் பொருத்தப்பட்டுள்ள சிறிய கேமரா பயிர்களின் வளர்ச்சியினை அறியவும், பூச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியினை அறியவும் பயன் படுகிறது.  மேலும் இதன் மூலம் 15 லிட்டர் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக்கொண்டு பயிர்களுக்குத் தெளிக்க முடியும்.

இதன் சிறப்பு என்னவெனில் மனிதனால் செய்வதை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இந்த அக்ரிகாப்டர் செயல் படும். பூச்சிக்கொல்லி மருந்துகள் வீண் ஆகுவதும்  குறையும். விண்வெளி துறையை சேர்த்த மாணவர்கள் இதனை உருவாக்கி சாதனை படித்துள்ளார். இதை உருவாக்குவதற்கான செலவு  5.1 லட்சம் ரூபாய் வரை ஆகும் எனவும், இதற்கு காப்புரிமை கோரி இருப்பதாகவும் ஐஐடி மாணவர்கள் கூறுகின்றனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: IIT Madras: Students Has developed 'Agricopter': Ten Times Faster And With 100% Precision
Published on: 03 August 2019, 12:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now