மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 December, 2020 6:38 PM IST

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 நாட்களுக்கு கனமழை

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது

சமையல் சிலிண்டர் விலை 15 நாட்களில் ரூ.100 உயர்வு- அதிருப்தியில் இல்லத்தரசிகள்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

1.5 கோடி விலை நிர்ணயிக்கப்பட்ட விநோதமான ஆடு! அசர வைக்கும் வசீகரம்!

 

மழை பொழிவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தொண்டி (ராமநாதபுரம்) 10 செ.மீ, வட்டானம் (ராமநாதபுரம்), குடவாசல் (திருவாரூர்) தலா 6செ.மீ , நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), மன்னார்குடி (திருவாரூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), திருவாடானை (ராமநாதபுரம்), காரைக்கால் (காரைக்கால்), கடலூர் (கடலூர்), மீமிசல் (புதுக்கோட்டை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), திருவாரூர் (திருவாரூர்), அதிராமபட்டினம் (தஞ்சாவூர்) தலா 5செ.மீ, மதுக்கூர் (தஞ்சாவூர்), மண்டபம் (ராமநாதபுரம்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), பாபநாசம் (திருநெல்வேலி ), பட்டுக்கோட்டை ( தஞ்சாவூர்), திருப்பூண்டி ( நாகப்பட்டினம்) தலா 4 செ.மீ, முத்துப்பேட்டை (திருவாரூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), பேராவூரணி (தஞ்சாவூர் ), மணிமுத்தாறு (திருநெல்வேலி), நன்னிலம் (திருவாரூர்), புதுச்சேரி (புதுச்சேரி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), பரமக்குடி (ராமநாதபுரம்), பாம்பன் (ராமநாதபுரம்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), வலங்கைமான் (திருவாரூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), பண்ருட்டி (கடலூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), எட்டயபுரம் (தூத்துக்குடி) தலா 3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மானியம் - புதிய திட்டம் அறிமுகம்!!

English Summary: IMD forecast heavy rain may occur in many places of Tamil Nadu and Karaikal for the next 48 hours.
Published on: 16 December 2020, 01:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now