மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 March, 2020 7:49 PM IST

கரோனா வைரஸின் எதிரொலியாக மக்கள் உணவுப் பொருட்களை வாங்கி சேமித்து வைக்க துவங்கி உள்ளனர். இதன் விளைவாக அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. மக்களின் தேவையற்ற பீதியின் காரணமாக அசைவ உணவான கோழியை தவிர்த்து கடல் உணவுகளை உண்ண தொடங்கி உள்ளனர். இதனால் மீன்களின் விலை 30% முதல் 40% வரை அதிகரித்துள்ளது.

 சென்னையை அடுத்த காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்கள் நகரின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப் படுகிறது. தினமும், இப்பகுதியை சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்.  15 முதல் 18 டன் வரை மீன்கள் விற்பனைக்கு வருகிறது. அதன் மூலம் ரூ.20 கோடிக்கு வர்த்தகம் நடை பெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தினமும் மீன்கள்  வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலாலும், கோழிகளை உண்பதால் கரோனா தாக்கும் என்கிற தவறான கருத்தாலும் அசைவ பிரியர்கள் மீன்களை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர், என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, காசிமேடு மீனவர் சங்கத்தினர் கூறுகையில், கரோனா பீதியால் மீன் விற்பனையும் தடைபடும்   என்று எண்ணி மக்கள் அதிகமாக வாங்குவதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாது மீன்களை வாங்கி சேமித்து வைத்து பயன்படுத்துகின்றனர். மேலும் மீன் விலை உயர்வு என்பது தற்காலிகமானது என்று கூறினார்.

English Summary: Impact of COVID-19 Non Vegetarians Start to Buy More Fish: It Reflects in Price also
Published on: 25 March 2020, 07:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now